சுராசாந்த்பூர்
மணிப்பூரின் சுராசாந்த்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு நகரம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
சுராசாந்த்பூர் (Churachandpur), வடகிழக்கு இந்தியாவில் உள்ள மணிப்பூர் மாநிலத்தின் தெற்கில் அமைந்த சுராசாந்துபூர் மாவட்டம் மற்றும் சுராசாந்த்பூர் வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். மணிப்பூர் மன்னர் சுராசந்த் சிங் நினைவாக இந்நகரத்திற்கு இந்நகரத்திற்கு சுராசாந்த்பூர் எனப்பெயரிடப்பட்டது.[4][5]
இந்நகரத்தில் 5 ஏப்ரல் 2023 அன்று மெய்தெய் மக்கள் மற்றும் குகி மக்கள் இடையே மோதல்களைக் கட்டுப்படுத்த காவல்துறையால் சுடப்பட்டு 4 பேர் இறந்தனர்.[6]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி சுராசந்த்பூர் வருவாய் வட்டத்தின் மக்கள் தொகை 1,74,138 ஆகும். அதில் ஆண்கள் 87,542 மற்றும் பெண்கள் 86,596 உள்ளனர். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் 13.24% ஆகும். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 989 பெண்கள் வீதம் உள்ளனர். சராசரி எழுத்தறிவு 74.67% ஆக உள்ளது. பட்டியல் சமூகத்தவர்கள் மற்றும் பட்டியல் பழங்குடியினர் முறையே 0.23% மற்றும் 91.33% ஆகவுள்ளனர். இதன் மக்கள் தொகையில் கிறித்தவர்கள் 91.43%, இந்துக்கள் 5.79%, இசுலாமியர் 0.84%, பிறர் 1.76% ஆகவுள்ளனர்.[7] இங்குள்ள மக்களில் மணிப்புரியம் மற்றும் குக்கி பழங்குடியின மொழிகளைப் பேசுகின்றனர்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads