சூலமங்கலம்
தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
சூலமங்கலம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 61.66 மீ. உயரத்தில், (10.8810°N 79.1958°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு சூலமங்கலம் பகுதி அமைந்துள்ளது.
இசை முக்கியத்துவம்
பக்திப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற சூலமங்கலம் சகோதரிகள் என்ற இரு சகோதரிகளான ஜெயலட்சுமி மற்றும் இராஜலட்சுமி ஆகியோர் பிறந்த ஊர் சூலமங்கலம் ஆகும்.[1][2]
சமயம்
கோயில்கள்
தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்ற சௌந்தரராஜப் பெருமாள் கோயில் என்ற ஒரு பெருமாள் கோயில் மற்றும் கிருத்திவாகேசுவரர் கோயில் என்ற ஒரு சிவன் கோயில் ஆகிய இரண்டு கோயில்கள் சூலமங்கலத்தில் அமைந்துள்ளன.[3][4][5]
அரசியல்
சூலமங்கலம் பகுதியானது, பாபநாசம் (சட்டமன்றத் தொகுதி) மற்றும் மயிலாடுதுறை மக்களவைத் தொகுதி வரம்புகளுக்கு உட்பட்டதாகும்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads