திருகோணமலை மாநகர சபை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருகோணமலை மாநகரசபை (Trincomalee Municipal Council), ( திருகோணமலை மாநகரசபை) இலங்கையின் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள திருகோணமலை நகரப்பகுதிக்கு உரிய உள்ளூராட்சிச் சபை ஆகும்.[1] இந்த மாநகரசபையின் ஆட்சிக்கு உட்பட்ட பகுதிக்குள் வீதிகள், சுகாதாரம், வடிகால்கள், வீடமைப்பு, நூலகங்கள், பொதுப் பூங்காக்கள், பொழுதுபோக்கு வசதிகள் போன்ற வசதிகளை வழங்குவதற்கு இச்சபை பொறுப்பாக உள்ளது. இந்த மாநகரசபைப் பகுதி 12 வட்டாரங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஒவ்வொரு வட்டாரத்துக்கும் தனித்தனியாகப் பிரதிநிதிகள் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டனர். 2018 ஆம் ஆண்டு முதல் கலப்பு முறைத் தேர்தல்அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, திருகோணமலை மாநகரசபைக்கு 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும், மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.[1]
2023 மார்ச் 19 முதல் திருகோணமலை நகரசபை மாநகரசபையாகத் தரமுயர்த்தப்பட்டது.[1] இதற்கான முதலாவது தேர்தல் 2025 மே 6 அன்று நடத்தப்பட்டது.
Remove ads
வட்டாரங்கள்
திருகோணமலை மாநகரசபைக்கு பின்வரும் 12 வட்டாரங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன:[2]
- அபயபுரம் (2 உறுப்பினர்கள்)
- முருகாபுரி (2 உறுப்பினர்கள்)
- பாலையூற்று
- சிங்கபுரம் (2 உறுப்பினர்கள்)
- திருக்கடலூர்
- பெருந்தெரு
- சிவபுரி
- உவர்மலை
- தில்லைநகர்
- சோனகவாடி
- மனயாவெளி
- வில்லூண்டி
திருகோணமலை நகரசபைத் தேர்தல்கள்
1983 உள்ளூராட்சித் தேர்தல்கள்
18 மே 1983 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[3]
2006 உள்ளூராட்சித் தேர்தல்கள்
30 மார்ச் 2006 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[4]
2011 உள்ளூராட்சித் தேர்தல்கள்
17 மார்ச் 2011 இல் இடம்பெற்ற உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள்:[5][6]
2018 உள்ளூராட்சித் தேர்தல்கள்
2018 பெப்ரவரி 10 இல் நடைபெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் முதல் தடவையாகக் கலப்பு முறைத் தேர்தல் அறிமுகப்படுத்தப்பட்டது. இம்முறைப்படி, 14 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 24 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தேர்தல் முடிவுகள் வருமாறு:[2]
2028 தேர்தலில், திருகோணமலை நகரசபைக்குத் தலைவராக நாகராசா ராசநாயகம், துணைத் தலைவராக சேனாதிராசா சிறிஸ்கந்தராஜா ([[இலங்கைத் தமிழரசுக் கட்சி|இதக) ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.[2]
Remove ads
திருகோணமலை மாநகரசபைத் தேர்தல்கள்
2025 உள்ளூராட்சித் தேர்தல்கள்
திருகோணமலை மாநகரசபைக்கான முதலாவது தேர்தல் 2025 மே 6 அன்று இடம்பெற்றது. தேர்தல் முடிவுகள்:[7] 15 உறுப்பினர்கள் வட்டாரங்களில் இருந்து நேரடியாகவும், 10 உறுப்பினர்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறையிலும் மொத்தம் 25 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
2025 தேர்தலில் திருகோணமலை மாநகரசபையின் தலைவராக கந்தசாமி செல்வராஜா (இலங்கைத் தமிழரசுக் கட்சி), துணைத் தலைவராக நைனா முகம்மது மௌசூன் (சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு) ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர்.[8]
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads