திருவள்ளுவர் பல்கலைக்கழகம்
தமிழ்நாட்டின் வேலூரிலுள்ள ஒரு பல்கலைக்கழகம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
திருவள்ளுவர் பல்கலைக்கழகம் (Thiruvalluvar University) என்பது தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பல்கலைக்கழகம் ஆகும். அக்டோபர் 16, 2002 அன்று திருவள்ளுவர் பல்கலைக்கழக சட்டம், 2002 (தமிழ்நாடு சட்டம் 32 -2002) கீழ் உருவாக்கப்பட்டது. இப்பல்கலைக்கழகம் தொடக்கத்தில் வேலூர் கோட்டை வளாகத்தில் அமைந்திருந்தது. அதன் பின்னர் வேலூரை அடுத்த சேர்க்காட்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு செயற்பட்டு வருகிறது. இப்பல்கலைக்கழகம் உலகப்பொதுமறையான திருக்குறளை எழுதிய திருவள்ளுவரின் பெயரில் அமைந்துள்ளது. விழுப்புரம், கடலூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் இப்பல்கலைக்கழகத்தின் கீழ் வருகின்றன.
Remove ads
வரலாறு
தொடக்கத்தில், சென்னைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை படிப்பிற்கான விரிவாக்க/நீட்சி மையமாக வேலூர் கோட்டை வளாகத்தில் செயற்பட்டு வந்தது. பின்னர்ப் பல்கலைக்கழகமாக விரிவுபடுத்தப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் உள்ள துறைகள்
- பொருளாதாரம்
- விலங்கியல்
- வேதியியல்
- மானிடவியல்
- உயிர்-நுட்பவியல்
- குற்றவியல் மற்றும தடய அறிவியல்
- கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல்
- சுற்றுச் சூழலியல்
- ஆற்றலியல்
- கல்வியியல்
- ஆங்கிலம்
- உணவியல்
- வரலாறு
- மொழியியல்
- இலக்கியம்
- புவியியல்
- நூலகம் மற்றும் தகவலியல்
- மருத்துவ இயற்பியல்
- கடலியல்
- மருந்தியல்
- இயந்திரவியல்
- நுண் உயிரியல்
- அணுக்கரு இயற்பியல்
- அரசியல்
- கணிதவியல்
- நரம்பியல்
- மனவியல்/உளவியல்
- மனையியல்
- தத்துவயியல்
- சமூகவியல்
- புள்ளியியல்
- பொருளறிவியல்
- தொடர்பியல்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads