தேசிய நெடுஞ்சாலை 169 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 169 அல்லது தே. நெ. 169 (முன்னர் 13)(National Highway 169 (India)) என்பது, இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தின் சோலாப்பூர் என்னும் இடத்தையும், கர்நாடகத்தில் உள்ள மங்களூர் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை ஆகும். 691 கிலோமீட்டர்கள் நீளமான இச் சாலை இரண்டு மாநிலங்களூடாகச் செல்கிறது. இதில் மகாராஷ்டிரா43 கி.மீ. நீளப் பகுதியையும், கர்நாடகா 648 கி.மீ. நீளப் பகுதியையும், தம்முள் அடக்கியுள்ளன. தற்போது இந்த நெடுஞ்சாலைக்கு தேசிய நெடுஞ்சாலை 169 என்று மறுப்பெயரிடப்பட்டுள்ளது.[1]
Remove ads
வழி
இந்த இரண்டு மாநிலங்களிலும் உள்ள பல நகரங்களையும் ஊர்களையும் இச் சாலை இணைக்கின்றது. ஒவ்வொரு மாநிலத்திலும், இச் சாலையில் உள்ள முக்கிய இடங்கள் கீழே தரப்பட்டுள்ளன.
- மஹாராஷ்டிரா : சோலாப்பூர், ஹத்தூர், நானந்தி, .
- கர்நாடகா: ஹோர்த்தி, பீஜப்பூர், ஹுன்குண்ட், குஷ்தாகி, ஹோஸ்பேட், ஜகளூர், சிக்கன்னனஹள்ளி, லக்ஷ்மிசாகர, சித்திரதுர்கா, ஹோலால்கெரே, சன்னகிரி, ஜலதாளு, பத்ரவதி, ஷிமோகா, ஹோசனஹள்ளி, கஜனூர், தீர்த்தஹள்ளி, அகும்பே, சோமேஸ்வர், கார்க்கால், மோகர், மங்களூர்.
Remove ads
நெடுஞ்சாலைச் சந்திப்புக்கள்
தேசிய நெடுஞ்சாலை 13, தேசிய நெடுஞ்சாலை 63 ஐ ஹோஸ்பேட் என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 4 ஐ லக்ஷ்மிசாகர என்னும் இடத்திலும், தேசிய நெடுஞ்சாலை 206 ஐ ஷிமோகாவிலும் குறுக்கே வெட்டிச் செல்கின்றது.
மேற்கோள்கள்
இவற்றையும் பார்க்கவும்
உசாத்துணை
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads