தேசிய நெடுஞ்சாலை 63 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தேசிய நெடுஞ்சாலை 63 (தே. நெ. 63)(National Highway 63 (India)) என்பது இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலையாகும். இதன் மொத்த நீளம் 961 கி.மீ. (597 மைல்) ஆகும். இது மகாராட்டிரம், தெலங்காணா, சத்தீசுகர் மற்றும் ஒடிசா மாநிலங்கள் வழியாகச் செல்கிறது.[1][2]

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

வழித்தடம்

  • இந்த நெடுஞ்சாலை பார்சியிலிருந்து 11 கி. மீ. தொலைவில் உள்ள குசுலாம்பில் தொடங்கி,
  • இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 52ஐ யேத்சியில் கடந்து செல்கிறது.
  • இந்த நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலை 548பி-ஐ லாத்தூர், ரெனாப்பூரில் கடந்து செல்கிறது.
  • இந்த நெடுஞ்சாலை அசுடமோத்தில் தேசிய நெடுஞ்சாலை 361ஐக் கடக்கிறது.
  • இந்த நெடுஞ்சாலை உத்கிரில் தேசிய நெடுஞ்சாலை 50ஐக் கடக்கிறது.
  • இந்த நெடுஞ்சாலை ஆர்மூரில் தேசிய நெடுஞ்சாலை 44ஐக் கடக்கிறது.
  • தேசிய நெடுஞ்சாலை 163 போபால்பட்டணத்தில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
  • தேசிய நெடுஞ்சாலை 563 இந்த நெடுஞ்சாலையை ஜக்தியாலில் இணைக்கிறது.
  • தேசிய நெடுஞ்சாலை 363 மஞ்சேரியலில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
  • தேசிய நெடுஞ்சாலை 30 ஜக்தல்பூரில் இந்த நெடுஞ்சாலையுடன் இணைகிறது.
  • தேசிய நெடுஞ்சாலை 26 இந்த நெடுஞ்சாலையை போரிகும்மாவில் இணைக்கிறது. இது விஜயநகரத்தில் முடிவடைகிறது.

இந்த நெடுஞ்சாலை தெலங்காணா மாநிலத்தின் பெடாபள்ளி மாவட்டம் மற்றும் மஞ்சேரியல் மாவட்டத்தின் எல்லையில் கோதாவரி ஆற்றினையும், மகாராட்டிரா மற்றும் தெலங்காணா எல்லையில் பிரணஹிதா ஆற்றினையும் மற்றும் மகாராட்டிரா, சத்தீசுகர் எல்லையில் இந்திராவதி ஆற்றையும் கடக்கிறது. மகாராட்டிரா மற்றும் தெலங்காணா மாநில எல்லையில் சிரோஞ்சா அருகே பிரணஹிதா ஆற்றின் குறுக்காகவும் மகாராட்டிரா மற்றும் சத்தீசுகர் மாநிலத்தில் போபால்பட்னம் அருகே இந்திராவதி ஆற்றின் குறுக்காகவும் பாலங்கள் திறந்து வைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. எதிர்காலத்தில் இந்த நெடுஞ்சாலை விசாகப்பட்டினம், கட்டாக் மற்றும் புவனேசுவரம் வழியாக மும்பையை இணைக்கும்.

Remove ads

படம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads