பிஸ்வநாத் சார்யாலி

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிசுவநாத் சார்யாலி (Biswanath Chariali), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் மேல் அசாம் கோட்டத்தில் உள்ள பிசுவநாத் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது கவுகாத்திக்கு வடகிழக்கே 229.2 கிலோ மீட்டர் தொலைவிலும்; தேச்சுபூருக்கு வடகிழக்கில் 62.5 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது. இந்நகரத்தில் பிரம்மபுத்திரா ஆறு பாய்கிறது

விரைவான உண்மைகள் பிசுவநாத் சார்யாலி, நாடு ...
Remove ads

மக்கள் தொகை பரம்பல்

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 8 வார்டுகளும், 4,454 வீடுகளும் கொண்ட பிசுவநாத் சார்யாலி நகரத்தின் மக்கள் தொகை 19,145 ஆகும். அதில் ஆண்கள் 9,771 மற்றும் பெண்கள் 9,374 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 959 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 9.69% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 90.88% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 89.37%, இசுலாமியர் 9.41%, பௌத்தர்கள் , சமணர்கள் 0.29%, சீக்கியர்கள் 0.30%, கிறித்தவர்கள் 0.34% மற்றும் பிறர் 0.29% ஆகவுள்ளனர். [1]

மொழிகள்

இந்நகரத்தில் அசாமிய மொழி 49.57%, வங்காள மொழி 26.96%, இந்தி மொழி 17.94% மற்றும் பிற மொழிகள் 5.53% மக்களால் பேசப்படுகிறது.

Remove ads

நீர்வழிப் போக்குவரத்து மையம்

கடல் மாலை திட்டம் மற்றும் பாரத்மாலா திட்டங்களின் பகுதியான பிரம்மபுத்திரா ஆறு தேசிய நீர்வழிச்சாலை எண் 2-இன் மையமாக பிசுவநாத் சார்யாலி நகரம் செயல்படுகிறது.[2] தேசிய நீர்வழிச்சாலை எண் 2, வடகிழக்கு இந்தியாவுடன் தேசிய நீர்வழிச்சாலை எண் 19 இணைக்கிறது.

போக்குவரத்து

தேசிய நெடுஞ்சாலை எண் 15 தேச்சுபூர் நகரத்துடன் பிசுவநாத் சார்யாலியை இணைக்கிறது. பிசுவநாத் சார்யாலி தொடருந்து நிலையம்[3]கவுகாத்தி, கொல்கத்தா, சென்னை நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. அருகில் உள்ள வானூர்தி நிலையம் தேச்சுபூரில் உள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads