மணப்பந்தல் (திரைப்படம்)

From Wikipedia, the free encyclopedia

மணப்பந்தல் (திரைப்படம்)
Remove ads

மணப்பந்தல் (Manapanthal) 1961ஆம் ஆண்டில் வி. என். ரெட்டி இயக்கத்தில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். எஸ். எஸ். ராஜேந்திரன், சரோஜா தேவி, ஈ. வி. சரோஜா, எஸ். ஏ. அசோகன். ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்திரங்களில் நடித்திருந்தனர். இத்திரைப்படத்திற்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தார்.[1] இத்திரைப்படம் தெலுங்கில் இந்திக்கி தீபம் இல்லாளே என்ற பெயரில் வெளிவந்தது. இரண்டும் சப்ரினா (1954) என்ற அமெரிக்கத் திரைப்படத்தின் கதையை ஒட்டியது.[2]

விரைவான உண்மைகள் மணப்பந்தல், இயக்கம் ...
Remove ads

திரைக்கதை

ராஜசேகரன் (எஸ். ஏ. அசோகன்) ஒரு குடிகாரர், அவருடைய இளைய சகோதரர் குணசேகரன் (எஸ். எஸ். ராஜேந்திரன்) ஒரு வெற்றிகரமான மருத்துவர். இவர்களின் விதவைத் தாய் கண்ணாம்பா (கண்ணாம்பா) ராஜசேகரனை சீர்திருத்த முயன்றார். குணசேகரன் வேறோர் ஊரில் ஒரு விதவை தாய் தருவம்மாவின் (கே. மாலதி) வீட்டில் தங்கியிருக்கிறான். அவளுடைய மகள் மாலதியிடம் (ஈ. வி. சரோஜா) குணசேகரன் ஆர்வம் காட்டினான்.

ஒரு நாள் தனது சொந்த ஊருக்குத் திரும்பும் போது, தொடருந்தில் குணசேகரன் தர்மலிங்கம் (வி. நாகையா) என்ற வயோதிபரையும் அவரது மகள் சுகுணாவையும் (சரோஜாதேவி) சந்திக்கிறான். இருவரும் காதலிக்கிறார்கள், விரைவில் திருமணம் செய்து கொள்ளத் தீர்மானிக்கிறார்கள். இதற்கிடையில், ராஜசேகரனின் தாயார் அவனுக்கு சுகுணாவை நிச்சயித்து திருமணம் செய்விக்கிறார். குணசேகரன், ஒரு விபத்துக் காரணமாக, திருமணத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. சுகுணாவைப் பின்னர் சந்தித்தபோது, அதிர்ச்சியடைந்தான். ராஜசேகரன் தன் மனைவியையும், சகோதரனையும் சந்தேகப்பட்டு, அவர்களைக் கொல்ல முடிவு செய்கிறார். இதற்கிடையில், கண்ணாம்பா தனது மருமகளுக்கு அனைத்து சொத்துகளையும் விட்டுவிட்டு இறந்து விடுகிறார்.

குணசேகரன் குடிப்பழக்கத்திற்கு அடிமையானதாக நடித்துத் தனது மைத்துனி சுகுணாவிடம் முறைகேடாக நடக்கிறான். சுகுணா அவனைக் கன்னத்தில் அறைகிறாள். இதைப் பார்த்த சுகுணாவின் கணவன் உண்மையை உணர்ந்து அவளிடம் மன்னிப்பு கேட்கிறான். குடும்பம் மீண்டும் ஒன்றிணைந்தது. குணசேகரன் தொடருந்தில் செல்லும் போது, ஓர் இளம் பெண் தற்கொலை செய்துகொள்வதற்காக தண்டவாளத்தில் படுத்திருக்க, தொடருந்து சரியான சரியான நேரத்தில் நிற்கிறது, குணசேகரன் அந்தப் பெண் மாலதி என்பதைக் கண்டுபிடித்து, அவளைத் திருமணம் செய்து கொள்கிறான்.

Remove ads

நடிகர்கள்

பாடல்கள்

விரைவான உண்மைகள் மணப்பந்தல், இசையமைப்பு விஸ்வநாதன்-ராமமூர்த்தி ...

கண்ணதாசனின் பாடல்களுக்கு விஸ்வநாதன்-ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர்.[3] பி. பி. ஸ்ரீனிவாஸ், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. எஸ். பகவதி, எஸ். ஜானகி & எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பாடியிருந்தனர்.[2]

மேலதிகத் தகவல்கள் இல., பாடல் ...

தயாரிப்பு

இத்திரைப்படம் டி. ஆர். ராமண்ணா, டி. ஆர். ராஜகுமாரி ஆகியோரது திரைப்படத் தயாரிப்பு நிறுவனமான ஆர். ஆர். பிக்சர்சு நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியானது.

வெளியீடும் வரவேற்பும்

மணப்பந்தல் 1961 சனவரி 14 பொங்கல் வெளியீடாக வெளியிடப்பட்டது.[3] பல திரையரங்குகளில் 100 நாட்களுக்கு மேல் ஓடி வெற்றி கண்டது.[2]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads