மதுரை எஸ். சோமசுந்தரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மதுரை எஸ். சோமசுந்தரம் (9 பெப்ரவரி 1919 – 9 திசம்பர் 1989), தமிழ்நாட்டைச் சேர்ந்த கருநாடக இசைப் பாடகர் ஆவார். இவர் மதுரை சோமு என்ற பெயருடன் அழைக்கப்பட்டார்.
Remove ads
ஆரம்பகால வாழ்க்கை
மதுரை சோமு கலைக்குடும்பம் ஒன்றில் சச்சிதானந்தம் பிள்ளை, கமலாம்பாள ஆகியோருக்குப் பிறந்தார். இவருடைய பாட்டனார் சுந்தரராஜப் பிள்ளை, பாட்டியார் நாகரத்தினம்மாள். தந்தையாருக்கு இவர் 10வது பிள்ளை. பெற்றோர்கள் இவரை பரமசிவம் என்று அழைத்தனர்.[1]
தனது இசைப் பயிற்சியை சேச பாகவதர், அபிராம சாஸ்திரி மற்றும் சித்தூர் சுப்ரமண்யம் பிள்ளை ஆகியோரிடமிருந்து பெற்றார். சித்தூர் சுப்பிரமணியம் பிள்ளை சென்னை, புரசைவாக்கம் வல்லம் பங்காருச் செட்டித் தெருவில் குடியிருந்தார். அவரது வீட்டிலேயே 14 ஆண்டுகள் தங்கி இசைப் பயிற்சி பெற்றார்.[1]
Remove ads
திருமணம்
1947 இல் திருக்கருகாவூர் வித்துவான் குருநாதபிள்ளை என்பவரின் பேத்தியும், சக்திவேல் பிள்ளை என்பவரின் மகளுமான சரோஜா என்பவரைத் திருமணம் புரிந்தார்.[1]
தொழில் வாழ்க்கை
இவர் தனது முதல் கச்சேரியை 1934 ஆம் ஆண்டு திருச்செந்தூரில் நிகழ்த்தினார். இவர் வாய்ப்பாட்டில் மட்டுமல்லாமல், மிருதங்கம், கஞ்சிரா போன்ற இசைக்கருவிகளிலும் சிறந்த பயிற்சி உடையவர்.[1] 1979 ஆம் ஆண்டில் திருவாவடுதுறை ஆதீன வித்துவானாகவும், தமிழக அரசின் அரசவைக் கவிஞராகவும், காஞ்சி காமகோடி பீடத்தின் ஆஸ்தான வித்துவானாகவும் நியமிக்கப்பட்டார்.[1]
மாதுலிகா, ஓம்காளி, வசீகரி, சோமப்பிரியா போன்ற இராகங்களை இவர் உருவாக்கியுள்ளார்.[1]
திரைப்படத்தில் பாடல்
1972 ஆம் ஆண்டில் வெளிவந்த தெய்வம் திரைப்படத்தில் மருதமலை மாமணியே முருகையா.. என்ற பாடலைப் பாடினார். இதனை விட "சஷ்டி விரதம்" என்ற திரைப்படத்திலும் பாடியுள்ளார்.[1]
பட்டங்கள்
விருதுகள்
- இசைப்பேரறிஞர் விருது, 1971; வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை.[2]
- பத்மஸ்ரீ விருது, 1976; வழங்கியது: இந்திய அரசு
- சங்கீத நாடக அகாதமி விருது, 1978. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி[3]
- சங்கீத கலாசிகாமணி விருது, 1983, வழங்கியது தி இந்தியன் ஃபைன் ஆர்ட்ஸ் சொசைட்டி
- கௌரவ முனைவர் பட்டம் 1979இல் அண்ணாமலை பல்கலைக்கழகம் வழங்கியது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads