கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை
கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை அல்லது கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலை (ஆங்கிலம்: Malaysia Federal Highway; (FH2) அல்லது Kuala Lumpur–Klang Highway); மலாய்: Lebuhraya Persekutuan Malaysia அல்லது Lebuhraya Persekutuan Kuala Lumpur–Klang) என்பது மலேசியா, கோலாலம்பூர்; சிலாங்கூர் மாநிலப் பகுதிகளில் உள்ள கூட்டரசு நெடுஞ்சாலை ஆகும்.[1]
கோலாலம்பூர், செபுத்தே பகுதியில் தொடங்கும் இந்த நெடுஞ்சாலை 45 கிமீ (28 மைல்) நீளம் கொண்டது; கோலாலம்பூர்; பெட்டாலிங் ஜெயா; சா ஆலாம்; கிள்ளான், கிள்ளான் துறைமுகம் ஆகிய நகரங்களை இணைக்கிறது.
கிள்ளான் பள்ளத்தாக்கின் பரபரப்பான நெடுஞ்சாலைகளில் இதுவே முதல்நிலை வகிக்கிறது. இந்தச் சாலை, மலேசிய கூட்டரசு சாலை (Malaysia Federal Route 2) அல்லது மலேசிய கூட்டரசு 2 என குறியிடப்பட்டுள்ளது.[2]
Remove ads
பொது
1965-ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதி சிங்கப்பூர் மலேசியாவில் இருந்து பிரிந்த பிறகு, சிங்கப்பூர் துறைமுகத்திற்குப் பதிலாக மலேசியாவின் புதிய தேசியத் துறைமுகமாக போர்ட் சுவெட்டன்காம் (தற்போது கிள்ளான் துறைமுகம்) துறைமுகத்தை அமைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்தது.
அதன் பின்னர் தான் இந்த நெடுஞ்சாலையின் வரலாறு தொடங்கியது. இதன் விளைவாக, முன்னாள் கோலாலம்பூர்-கிள்ளான் நெடுஞ்சாலையை (Kuala Lumpur–Klang Highway) மேம்படுத்துவதன் மூலம் கிள்ளான் துறைமுகம் மற்றும் கோலாலம்பூரை இணைக்கும் நெடுஞ்சாலையை உருவாக்கலாம் என அரசாங்கம் திட்டமிட்டது.
இந்த நெடுஞ்சாலை 14 சனவரி 1959 அன்று போக்குவரத்துக்கு திறக்கப்பட்டது)[3] அப்போதுள்ள சாலைச் சந்திப்புகளை மாற்றுப் பாதைகளுடன் இணைத்தன் மூலம் ஒரு முழு நெடுஞ்சாலை உருவாக்கப்பட்டது. அந்த வகையில் பழைய கூட்டரசு சாலை புதிய நெடுஞ்சாலையாக மாறியது; அத்துடன் மலேசியாவின் முதல் அதிவேக நெடுஞ்சாலையாகவும் பெயர் பெற்றது.
Remove ads
அமைவு
கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா போக்குவரத்துப் பரவல் திட்டம், 1974-இல் மலேசிய பொதுப்பணித் துறையின் (JKR) கண்காணிப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டது.
இந்தத் திட்டத்தில் கோலாலம்பூர் உள்வட்டச் சாலை, கோலாலம்பூர் மத்திய வட்டச் சாலை 1, சையத் புத்ரா சாலை மற்றும் மலேசிய கூட்டரசு நெடுஞ்சாலை 2 (கோலாலம்பூர்-பெட்டாலிங் ஜெயா) ஆகியவை அடங்கும்.
கட்டுமானம்
இந்த நெடுஞ்சாலை கட்டுமானத்திற்கு உலக வங்கி வழங்கிய கடன் நிதி வழங்கியது. அதன் மூலமாக சுபாங் வானூர்தி நிலைய மாற்றுவழியில் இருந்து கோலாலம்பூர் வரையிலான கூட்டர்சு நெடுஞ்சாலைக்கான மேம்படுத்தல் பணிகள் 1974 முதல் 1977 வரை நீடித்தன
இந்த நெடுஞ்சாலை முதலில் 4 வழிச்சாலையாக இருந்தது. இருப்பினும், 1992 ஆம் ஆண்டு பிளஸ் விரைவுச்சாலைகள் நிறுவனம் (PLUS Expressways), பத்து தீகா மற்றும் சுங்கை ராசாவ் ஆகிய இரண்டு சுங்கச் சாவடிகளுடன் முழு நெடுஞ்சாலையையும் 6-வழி நெடுஞ்சாலையாக மேம்படுத்தியது.
6-வழி சுங்கச்சாவடி 11 மே 1993-இல் செயல்படத் தொடங்கியது. இந்த நெடுஞ்சாலை பெரிய அளவிலான போக்குவரத்தைக் கையாளுகிறது; மேலும் ஒரு நாளில் எந்த நேரத்திலும் குறிப்பிடத்தக்க நெரிசல் ஏற்படலாம் என்றும் அறியப்படுகிறது.[4]
சாலைத் தரம்
இந்தக் கூட்டரசு நெடுஞ்சாசாலையின் பெரும்பாலான பகுதி, ஜேகேஆர் R5 (JKR R5) சாலைத் தரத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் அதிகபட்ச வேக வரம்பு 90 கி.மீ. (56 மைல்) வரை அனுமதிக்கப் படுகிறது. அத்துடன், சில பிரிவுகளில் விசையுந்து பாதைகளும் உள்ளன.[5]
விளக்கம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads