முத்தம்பாளையம்

ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia

Remove ads

முத்தம்பாளையம் (ஆங்கிலம்: Muthampalayam) என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2]

விரைவான உண்மைகள் முத்தம்பாளையம்Muthampalayam முத்தம்பாளையம், நாடு ...

கடல் மட்டத்திலிருந்து சுமார் 232 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள முத்தம்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.292510°N 77.685874°E / 11.292510; 77.685874 ஆகும். ஈரோடு, காசிபாளையம், அரங்கம்பாளையம், மூலப்பாளையம், மூலப்பட்டறை, முள்ளாம்பரப்பு மற்றும் கஸ்பாபேட்டை ஆகியவை முத்தம்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.

2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், முத்தம்பாளையம் பகுதியின் மொத்த மக்கள் தொகை 1,809 ஆகும்.[3]

ஈரோடு மாவட்டத்தில் குளத்துப்பண்ணை மற்றும் அசோகபுரி ஆகிய பகுதிகளில் ஆக்கிரமிப்பு இடங்களில் குடியிருந்தோர்களுக்கு மாற்று ஏற்பாடுகளாக, முத்தம்பாளையத்தில், தமிழ்நாடு அரசால், ரூ.‌21.27 கோடியில் 256 வீடுகள் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்பட்டு கொடுக்கப்பட்டுள்ளன.[4]

இங்கு அமைந்துள்ள முத்தம்பாளையம் மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது.[5]

முத்தம்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[6] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்பு

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads