முனீஸ்வரநாதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முனீஸ்வரநாதர் (Munisuvrata), சமண சமயத்தின் 20வது தீர்த்தங்கரர் ஆவார்.[1] முனீஸ்வரநாதர், கர்மத் தளைகளிலிருந்து விடுபட்டு, சித்த புருஷர் நிலையை அடைந்தவர். முனீஸ்வரநாதரின் காலத்தில் சைன ராமாயணம் படைக்கப்பட்டதாக கருதுகிறார்கள்.[2] இவரது குரு மல்லிநாதர் ஆவார்.
மன்னர் சுமித்திரருக்கும் - இராணி பத்மாவதிக்கும் பிறந்த முனீஸ்வரநாதர்[3] 30,000 ஆண்டுகள் வாழ்ந்து சிகார்ஜி மலையில் முக்தி அடைந்தார்.[4]
முனீஸ்வரநாதர் குறித்த வரலாற்று ஆதாரங்கள் இல்லை எனிலும், சமண சமய சாத்திரங்களின் படி, இவரது நிறம் கருமை, வாகனம் ஆமை, பரிவார யட்சினி பகுரூபினி ஆவார். இவரது மார்பில் உள்ள மச்சத்தின் பெயர் வருணன் என்பர்.[5]
Remove ads
கோயில்கள்
- முனீஸ்வரநாதர், அரநாதர் மற்றும் மல்லிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட சதுர்முக சமணக் கோயில், கர்நாடகாவின் கர்கலா கிராமத்தில் உள்ளது.[6]
- பாலிதானா சமணர் கோயில்கள் மற்றும் சிகார்ஜியில் முனீஸ்வரநாதரின் தனி சன்னதிகள் உள்ளது.
படக்காட்சியகம்
|
Remove ads
இதனையும் காண்க
அடிக்குறிப்புகள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads