Remove ads

மூன்றாம் கிளியோபாட்ரா (Cleopatra III கிமு 160/155 – 101) பண்டைய பிற்கால எகிப்திய அரசிகளில் ஒருவர்.[2] எகிப்தை ஆண்ட கிரேக்க தாலமி வம்சத்தைச் சேர்ந்த பெண் அரசி ஆவார்.

விரைவான உண்மைகள் மூன்றாம் கிளியோபாட்ரா, பண்டைய எகிப்தின் பெண் ஆட்சியாளர் ...

இவர் முதலில் தனது தாய் இரண்டாம் கிளியோபாட்ரா மற்றும் தனது கணவன் எட்டாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 142- 131) வரையிலும் பின்னர் மீண்டும் (கிமு 127 - 116) காலகட்டத்திலும் இணை ஆட்சியாளராக எகிப்தை ஆண்டார். பின்னர் மூன்றாம் கிளியோபாட்ரா தனது மகன்களான ஒன்பதாம் தாலமி மற்றும் பத்தாம் தாலமியுடன் சேர்ந்து (கிமு 116 - 101) காலகட்டத்தில் எகிப்தின் இணை ஆட்சியாளராக ஆட்சி செய்தார்.

கிமு 107-இல் மூன்றாம் கிளியோபாட்ரா, ஒன்பதாம் தாலமியை அலெக்சாந்திரியா நகரத்திலிருந்து துரத்தி விட்டு, தனது மகன் பத்தாம் தாலமியை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆண்டார். ஆறு ஆண்டுகள் கழித்து கிமு 101-இல் பத்தாம் தாலமி, மூன்றாம் கிளியோபாட்ராவைக் கொலை செய்து விட்டு, பத்தாம் தாலமியின் மனைவியும், மூன்றாம் கிளியோபாட்ராவின் பேத்தியுமான மூன்றாம் பெரெனிசை இணை ஆட்சியாளராகக் கொண்டு எகிப்தை ஆட்சி செய்தார்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads