யமுனாநகர் மாவட்டம்

அரியானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

யமுனாநகர் மாவட்டம்
Remove ads

யமுனாநகர் மாவட்டம் (Yamunanagar district) (இந்தி|यमुनानगर जिला) வட இந்தியாவின் அரியானா மாநிலத்தின் இருபத்து ஒன்று மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் யமுனாநகர் ஆகும். இதன் பரப்பளவு 1756 சதுர கிலோ மீட்டர் ஆகும். இம்மாவட்டம் நவம்பர் 1989 - ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் மாநிலம், தலைமையகம் ...
Remove ads

அமைவிடம்

இம்மாவட்டத்தின் வடக்கில் இமாச்சலப் பிரதேசம், கிழக்கில் உத்தரப் பிரதேசம், தெற்கில் கர்னால் மாவட்டம், தென்மேற்கில் குருச்சேத்திர மாவட்டம் மற்றும் மேற்கில் அம்பாலா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மாவட்ட நிர்வாகம்

யமுனாநகர் மாவட்டம் ஜெகத்திரி, சச்ரௌலி மற்றும் பிலாஸ்பூர் என மூன்று வருவாய் வட்டங்களை கொண்டது. மேலும் யமுனாநகர் மாவட்டம் பிலாஸ்பூர், சதௌரா, முஸ்தபாபாத், ரதௌர், ஜகாதரி, மற்றும் சச்ரௌலி என ஆறு ஊராட்சி ஒன்றியங்களை கொண்டுள்ளது.

அரசியல்

இம்மாவட்டம் சடௌரா, ஜகாதரி, யமுனாநகர் மற்றும் ராதௌர் என நான்கு சட்டமன்ற உறுப்பினர் தொகுதிகளை உடையது. இம்மாவட்டம் அம்பாலா மக்களவைத் தொகுதியின் கீழ் வருகிறது.[1]

மக்கள் தொகையியல்

2011 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி யமுனாநகர் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை ஆக 1,214,205 உள்ளது. கிராமப்புறங்களில் 61.06% மக்களும்; நகரப்புறங்களில் 38.94% மக்களும் வாழ்கின்றனர். கடந்த பத்தாண்டுகளில் (2001-2011) மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 16.57% ஆக உயர்ந்துள்ளது. மக்கள் தொகையில் ஆண்களும் மற்றும் பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 877 பெண்கள் வீதம் உள்ளனர். 1,768 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட இம்மாநிலத்தில் மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் 687 மக்கள் வாழ்கின்றனர். இம்மாநிலத்தின் சராசரி படிப்பறிவு 77.99% ஆகவும், ஆண்களின் படிப்பறிவு 83.84% ஆகவும், பெண்களின் படிப்பறிவு 71.38% ஆகவும் உள்ளது. ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 146,789 ஆக உள்ளது. [2]

சமயம்

இம்மாவட்டத்தில் இந்து சமயத்தவரின் மக்கள் தொகை 984,929 (81.12 %) ஆகவும், இசுலாமிய சமய மக்கள் தொகை 138,569 (11.41 %) ஆகவும், சீக்கிய சமய மக்கள் தொகை 84,455 (6.96 %) ஆகவும், கிறித்தவ சமயத்தினரின் மக்கள் தொகை 3,646 (0.30 %) ஆகவும், சமண சமய மக்கள் தொகை 1,555 (0.13 %) ஆகவும், பௌத்த சமய மக்கள் தொகை 161 (0.01 %) மற்றும் சமயம் குறிப்பிடாதவர்கள் மக்கள் தொகை 764 (0.06 %) ஆகவும் உள்ளது.

மொழிகள்

அரியானா மாநிலத்தின் ஆட்சி மொழியான இந்தி மொழியுடன், பஞ்சாபி, உருது மற்றும் வட்டார மொழிகளும் இம்மாவட்டத்தில் பேசப்படுகின்றன்.

Remove ads

பொருளாதாரம் & போக்குவரத்து

மாவட்டத்தின் முக்கிய பொருளாதாரம் கோதுமை, பார்லி மற்றும் கரும்பு வேளாண்மைத் தொழிலையே நம்பியுள்ளது. மேலும் குர்காவான் நகரத்தின் தொழிற்சாலைகள் இம்மாவட்டத்திலும் பரவியுள்ளதால் மாநிலத்தின் தொழில் வளர்ச்சி அடைந்த மாவட்டங்களில் யமுனாநகர் மாவட்டமும் ஒன்றாக உள்ளது.

மாநிலத் தலைநகர் சண்டிகருடனும், தேசியத் தலைநகர் புதுதில்லியுடனும் சாலை, தொடருந்து இருப்புப்பாதைகளால் இணைக்கப்பட்டுள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads