வடக்கு வள்ளியூர்
தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒரு பேரூராட்சி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வடக்குவள்ளியூர் (ஆங்கிலம்: Vadakkuvalliyur), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருநெல்வேலி மாவட்டம், இராதாபுரம் வட்டம் சார்ந்திருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும்.
இது நடைமுறையில் மக்களாலும், பத்திரிகைகளாலும் வள்ளியூர் என்றே அழைக்கப்படுகிறது. இவ்வூரின் தெற்கே 4 கி.மீ. தொலைவில் தெற்கு வள்ளியூர் என்றழைக்கப்படும் கிராமம் உள்ளது.[4]
Remove ads
அமைவிடம்
வடக்குவள்ளியூர், திருநெல்வேலியிலிருந்து 40 கி.மீ. தொலைவிலும்; நாகர்கோவிலிலிருந்து 34 கி.மீ தொலைவிலும்; இராதாபுரத்திலிருந்து 18 கி.மீ. தொலைவிலும்; களக்காட்டிலிருந்து 20 கி.மீ. தொலைவிலும்; திசையன்விளையிலிருந்து 32 கி.மீ. தொலைவிலும்; வள்ளியூர் தொடருந்து நிலையம் 1 கி.மீ. தொலைவில் உள்ளது.
பேரூராட்சியின் அமைப்பு
30 ச.கி.மீ. பரப்பும், 18 வார்டுகளும், 147 தெருக்களும் கொண்ட இப்பேரூராட்சி, இராதாபுரம் (சட்டமன்றத் தொகுதி), திருநெல்வேலி மக்களவைத் தொகுதி ஆகியவற்றிற்கு உட்பட்டது.[5]
மக்கள் தொகை பரம்பல்
2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 7,760 வீடுகளும், 29,417 மக்கள்தொகையும் கொண்டது. [6]
வெளி இணைப்புகள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads