வல்லவரையன் வந்தியத்தேவன்
சோழ நாட்டு படைத் தளபதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
வல்லவரையன் வந்தியத்தேவன் சோழப் பேரரசின் கீழ் "வல்லவரையர் நாடு" என்ற சொல்லப்பட்ட பிரம்மதேசத்தை சுற்றியிருந்த சிறுநாட்டு மன்னர் ஆவார். முதலாம் இராசராசன் மற்றும் முதலாம் இராசேந்திரனின் படைகளின் மாதண்ட நாயக்கராக இருந்தவர்.[1] முதலாம் இராசராசனின் தமக்கையான குந்தவை பிராட்டியின் கணவரும் ஆவார். அப்போதைய வட ஆற்காடு மாவட்டத்தில் (தற்போது வேலூர்) பிரமதேசம் எனும் பகுதியினை அரசாண்டவர்.[2] சேலம் மாவட்டத்தின் ஒரு பகுதி வல்லவரையர் நாடு என வழங்கப்பட்டது.[3]
மற்ற குறுநிலமன்னர்களை சிறைப் பிடித்து, மன்னர்களின் பொருள்களை புலவர்களுக்கு பரிசு அளித்து வந்தனர்.[4] இவரின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதி வல்லவரையர் நாடு என்றழைக்கப்பட்டது. வந்தியத்தேவனைப் பல்வேறு வரலாற்றுப் புதின ஆசிரியர்கள் பலமிக்க சேனைத்தலைவனாகவே தம் புதினங்களில் விவரித்துள்ளனர்.
Remove ads
தோற்றம்
வந்திய தேவனின் தோற்றம் குறித்து பல்வேறு விவாதங்கள் இருப்பினும் பொன்னியின் செல்வன் ஆசிரியர் கல்கி. கிருஷ்ணமூர்த்தி வந்தியத் தேவனை வாணர் குலத்தைச் சார்ந்த வீரன் எனவும், இவர்கள் வாணர் பேரரசு மகதை மண்டலத்தைச் சார்ந்தவர்கள் எனவும் தன் நாவல் பொன்னியின் செல்வனில் குறிப்பிடுகிறார்.
ஆதாரங்கள்
இராசராசனின் அக்காள் குந்தவை, வல்லவராயர் வந்தியத்தேவரை மணந்தாள். கல்வெட்டுகள் குந்தவையை, ஆழ்வார் பராந்தகன் குந்தவைப் பிராட்டியார் என்றும் பொன்மாளிகைத் துஞ்சின தேவரின் புதல்வி என்றும் குறிப்பிடுகின்றன. தன் தமக்கையிடத்தில் இராசராசன் பெருமதிப்பு வைத்திருந்தான் தான் எடுப்புவித்த தஞ்சை பெரிய கோயிலுக்கு, தன் தமக்கை கொடுத்தவற்றை நடு விமானத்தின் கல்மீது, தான் கொடுத்தவற்றைப் பற்றி வரைந்துள்ள இடத்திற்கு அருகே வரையச் செய்ததோடு, தன் மனைவிமார்களும் அதிகாரிகளும் கொடுத்தவற்றைச் சுற்றியுள்ள பிறைகளிலும், தூண்களிலும் பொறிக்கச் செய்தான். வந்தியத் தேவனது பெயர் தஞ்சை பெரிய கோவில் கல்வெட்டுகளில் காணப்படுகிறது, அவர் முதலாம் இராசராசனின் சகோதரி குந்தவையின் கணவர் என்று குறிப்படப்பட்டுளது.

இதர நூல்கள்
வந்தியத்தேவனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.
- "பொன்னியின் செல்வன் – கல்கி" - வந்தியத்தேவனை கதைமாந்தராக கொண்டு கல்கியின் பொன்னியின் செல்வன் புதினத்திலும் முக்கிய இடம்பெற்றுள்ளார். வந்தியத்தேவனின் கதாப்பாத்திரமே பொன்னியின் செல்வன் கதையின் கதாநாயகனாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது. முதற் பாகத்தில் இருந்து இறுதிப்பாகம் வரை வந்தியத்தேவனை சுற்றியே கதை நகர்வதைக் காணலாம்.
- வந்தியத்தேவன் வாள் (புதினம்) – விக்ரமன்
- நந்திபுரத்து நாயகி – விக்கிரமன்
- வேங்கையின் மைந்தன் - அகிலன்
- உடையார் (புதினம்) – பாலகுமாரன்
Remove ads
குறிப்புகள்
- பொன்னியின் செல்வன்
- Gokul Seshadri's Ponniyinselvan Facts and Fiction
- Sadasiva Pandarathar's Pirkala Chozar Varalaaru (Annamalai University Publication)
- சதாசிவ பண்டாரத்தார் பிற்கால சோழர் வரலாறு வெளியீடு:அண்ணாமலை பல்கலைகழகம்.
மேற்கோள்கள்
- Ponniyin Selvan - Complete Novel in Tamil Wikisource (Unicode)
- Rajakesari, a new novel written by Gokul Seshadri, happens during the later part of Rajaraja Chola's life. It is a historic thriller that can be read in full from Varalaaru monthly e-magazine's website.To read the novel, Click here
- Cherar Kottai (Part-II of Rajakesari), another novel also by Gokul Seshadri happens during the early part of Rajaraja Chola's life. It fully explains the circumstances under which Rajaraja makes his first and memorable victory over Kanthaloor Chalai - a chera martial arts academy. It is a historic fiction that can be read from Varalaaru monthly e-magazine's website.To read the novel, Click here
- Kalvettu Sonna Kadaigal Series in Varalaaru.com Magazine
Remove ads
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads