கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் (Kasturba Nagar railway station) என்பது சென்னை பறக்கும் தொடருந்து திட்ட வழித்தடத்தில் உள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது சென்னையில் மத்திய கைலாசு பகுதியில் இராசீவ் காந்தி சாலையில் அமைந்துள்ள சென்னை பறக்கும் தொடருந்து திட்ட சேவை நிலையமாகும்.
Remove ads
வரலாறு
சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டத்தின் வலையமைப்பில் இரண்டாம் கட்டத்தின் ஒரு பகுதியாக கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் 26 சனவரி 2004 அன்று திறக்கப்பட்டது. இந்நிலையம் எல் & டி நிறுவனத்தினால் கட்டப்பட்டது.[1]
அமைப்பு
கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் உயர்த்தப்பட்ட நிலையம் ஆகும். இது பக்கிங்காம் கால்வாயின் மேற்குக் கரையில் கட்டப்பட்டுள்ளது. சென்னை பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் உள்ள மற்ற நிலையங்களைப் போலவே, கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையத்திலும் 2 பக்க நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு தளத்தின் நீளமும் 280 மீட்டர் ஆகும்..[2] கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலைய கட்டிடம் அதன் அடித்தளத்தில் 3,200 சதுர மீட்டர் வாகன நிறுத்துமிடத்துடன் உள்ளது.[3]
Remove ads
நிலைய அமைப்பு
| தத | தெரு மட்டம் | வெளியேறு/நுழைவு |
| நிலை1 | இடைமாடி | கட்டணக் கட்டுப்பாடு, நிலைய பயணச்சீட்டு நிலையங்கள், தானியங்கி பயணச்சீட்டு விற்பனை இயந்திரங்கள் |
| நிலை2 | பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | |
| நடைமேடை 2 வடக்கு நோக்கி |
→ சென்னைக் கடற்கரை நோக்கி அடுத்த நிலையம் கோட்டூர்புரம் | |
| நடைமேடை 1 தெற்கு நோக்கி |
← வேளச்சேரி நோக்கி அடுத்த நிலையம் இந்திரா நகர் (எதிர்கால விரிவாக்க இணைப்பு பரங்கிமலை) | |
| பக்க நடைமேடை | இடதுபுறத்தில் கதவுகள் திறக்கும் | ||
| நிலை2 | ||
வரிசை
வேளச்சேரி நோக்கிய சென்னைப் பறக்கும் தொடருந்துத் திட்டப் பாதையில் கசுதூரிபாய் நகர் தொடருந்து நிலையம் பன்னிரெண்டாவது நிலையமாகும். வேளச்சேரியிலிருந்து திரும்பும் திசையில், இது தற்போது சென்னை கடற்கரை நிலையத்தை நோக்கிய ஆறாவது நிலையமாக உள்ளது.[4]
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads

