கரை எல்லப்பாளையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரை எல்லப்பாளையம் (ஆங்கிலம்: Karai Ellapalayam) என்பது இந்திய தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் ஈரோடு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
கடல் மட்டத்திலிருந்து சுமார் 227 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள கரை எல்லப்பாளையம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 11.4415°N 77.6528°E ஆகும். ஈரோடு, எலவமலை, கருந்தேவன்பாளையம், சித்தோடு, ஊராட்சிக்கோட்டை மற்றும் பவானி ஆகியவை கரை எல்லப்பாளையம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கியமான புறநகர்ப் பகுதிகளாகும்.
பாரதப் பிரதமரின் முன்னோடி கிராம வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ள, ஈரோடு மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட மூன்று கிராமங்களில் கரை எல்லப்பாளையம் பகுதியும் ஒன்றாகும்.[1]
ஓங்காளியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று கரை எல்லப்பாளையம் பகுதியில் அமையப் பெற்றுள்ளது.[2] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
கரை எல்லப்பாளையம் பகுதியானது, ஈரோடு மேற்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். இதன் சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக 2021 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றவர் சு. முத்துசாமி ஆவார்.[4] மேலும் இப்பகுதி, ஈரோடு மக்களவைத் தொகுதி சார்ந்தது. இதன் மக்களவைத் தொகுதி உறுப்பினராக அ. கணேசமூர்த்தி, 2019 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் வெற்றி பெற்றார்.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads