சீனர்கள், மகாபாரதம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
சீனர்கள் (Chinas or Chīnaḥ (சமஸ்கிருதம் चीन:), மகாபாரத காவியம் மற்றும் புராணங்கள் கூறும், பண்டைய பரத கண்டத்தின் வடகிழக்கில் வாழ்ந்த மஞ்சள் நிற மக்களாவர். இம்மக்கள் தற்கால சீனா நாட்டைச் சேர்ந்தவர்கள்.
மகாபாரதக் குறிப்புகள்
குருச்சேத்திரப் போரில் பகதத்தனின் பிராக்ஜோதிச படையில், கிராதர்களுடன், சீன வீரர்களும் இருந்தனர்.
மகாபாரதம், பீஷ்ம பருவம், அத்தியாயம் 65 & 66-இல் சீனர்களுடன், மிலேச்சர்கள், யவனர்கள், சகர்கள், சிதியர்கள், காம்போஜர்கள், குந்தலர்கள், ஹூணர்கள், பாரசீகர்கள், தருணர்கள், இரமணர்கள், தசமாலிகர்கள் போன்ற வெளிநாட்டு இன மக்களைக் குறித்துள்ளது. [1]
மகாபாரதத்தின் சாந்தி பருவத்தில் சீனர்களை இமயமலைத்தொடர்களில் உள்ள உத்தரபாத நாடுகளின் யவனர்கள், கிராதர்கள், காந்தாரர்கள், ஷபரர்கள், சகர்கள், துஷாரர்கள், பகவலவர்கள், மத்திரர்கள், காம்போஜர்களுடன் ஒப்பிட்டு பேசுகிறது. இம்மக்கள் வேத கால பண்பாட்டை பின்பற்றாதவர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.[2]
மகாபாரத வன பருவத்தில், கிராதர்களின் இமயமலை வழியாக சீனர்களின் நிலப்பரப்பை அடையலாம் எனக்குறித்துள்ளது. பரத கண்டத்திற்கு வடக்கே அமைந்த நாடுகளின் ஒன்றாக சீனர்களின் நாட்டை குறிப்பிடப்பட்டுள்ளது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads