செட்டிபுண்ணியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
செட்டிபுண்ணியம் (ஆங்கிலம்: Chettipunyam) என்பது தமிழ்நாடு மாநிலத்தின் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1]
கடல் மட்டத்திலிருந்து சுமார் 86 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள செட்டிபுண்ணியம் பகுதியின் புவியியல் ஆள்கூறுகள், 12.7626°N 80.0071°E ஆகும். சிங்கபெருமாள்கோவில், மறைமலைநகர், செங்கல்பட்டு, கூடுவாஞ்சேரி, வண்டலூர், பெருங்களத்தூர் மற்றும் தாம்பரம் ஆகியவை செட்டிபுண்ணியம் பகுதிக்கு அருகிலுள்ள சில முக்கிய புறநகர்ப் பகுதிகளாகும்.
யோக ஹயக்ரீவர் கோயில் என்றழைக்கப்படும் தேவநாதபெருமாள் கோயில், செட்டிபுண்ணியம் பகுதியில் அமைந்துள்ளது.[2] இக்கோயில், தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இயங்குகிறது.[3]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads