தொழுப்பேடு, செங்கல்பட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தொழுப்பேடு[1][2][3] என்பது இந்தியா தீபகற்பத்தில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.
![]() |
Remove ads
அமைவிடம்
தொழுப்பேடு பகுதியானது, (12.3614°N 79.7909°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு, கடல் மட்டத்திலிருந்து சுமார் 47.7 மீட்டர்கள் (156 அடி) உயரத்தில் அமைந்துள்ளது.
போக்குவரத்து
தொடருந்து நிலையம்
தொழுப்பேடு பகுதியில் தொடருந்து நிலையம் ஒன்று உள்ளது.[4] திருப்பதி மற்றும் புதுச்சேரி இடையே இயக்கப்படும் தொடருந்து இருமார்க்கங்களிலிருந்தும் தலா ஒரு முறை வீதம் தொழுப்பேடு தொடருந்து நிலையத்தில் இரண்டு முறைகள் நின்று செல்கின்றன.[5]
சமயம்
தொழுப்பேடு புறநகரில் அமையப் பெற்றுள்ள சுந்தர விநாயகர் கோயில், இராமகிருஷ்ண சுவாமி மடம் ஆகியவை தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்கி வருகின்றன.[6][7]
உசாத்துணைகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads