நாதம்பாளையம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

நாதம்பாளையம் என்ற எம். நாதம்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள அவிநாசி ஊராட்சி ஒன்றியத்தின் செம்பியநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2] பதினெட்டாம் நூற்றாண்டைச் சார்ந்த 'நடுகல்' ஒன்று நாதம்பாளையம் பகுதியில் கிடைக்கப் பெற்றதை வரலாற்று ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளனர்.[3]

விரைவான உண்மைகள் நாதம்பாளையம், நாடு ...
Remove ads

அமைவிடம்

கடல் மட்டத்திலிருந்து சுமார் 344.44 மீ. உயரத்தில், (11.1797°N 77.3711°E / 11.1797; 77.3711) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு நாதம்பாளையம் அமையப் பெற்றுள்ளது.

Thumb
நாதம்பாளையம்
நாதம்பாளையம்
நாதம்பாளையம் (தமிழ்நாடு)

சமயம்

இந்துக் கோயில்கள்

கரியபெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற மாரியம்மன் கோயில்[4] என்ற அம்மன் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் நாதம்பாளையம் பகுதியில் அமைந்துள்ளன.

அரசியல்

நாதம்பாளையம் பகுதியானது, அவினாசி (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, நீலகிரி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads