பதினெட்டாங்குடி
தமிழ்நாட்டின் மதுரை மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பதினெட்டாங்குடி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் ஊராட்சி ஒன்றியத்தின் பதினெட்டாங்குடி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 155.82 மீ. உயரத்தில், (9.9938°N 78.3307°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பதினெட்டாங்குடி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பதினெட்டாங்குடி ஊரின் மொத்த மக்கள்தொகை 2,478 பேர் ஆகும்.[3] இதில் 1,290 பேர் ஆண்கள் மற்றும் 1,188 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
செல்லியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று பதினெட்டாங்குடி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
அரசியல்
பதினெட்டாங்குடி பகுதியானது, மேலூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, மதுரை மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads