பல்லகவுண்டன்பாளையம்
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பல்லகவுண்டன்பாளையம் என்ற முகாசிபல்லகவுண்டன்பாளையம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஊத்துக்குளி ஊராட்சி ஒன்றியத்தின் நடுப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[3][4]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 307.2 மீ. உயரத்தில், (11.2307°N 77.4630°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பல்லகவுண்டன்பாளையம் அமையப் பெற்றுள்ளது.
தொழில்
சக்தி குழுமத்தின் 'சக்தி ஆட்டோ காம்பொனென்ட் லிமிடெட்' என்ற 'வாகன பாகங்கள் உற்பத்தித் தொழிற்சாலை' ஒன்று இப்பகுதியில் இயங்கி வருகிறது.[5]
சமயம்
இந்துக் கோயில்கள்
செல்வ விநாயகர் கோயில் என்ற பிள்ளையார் கோயில் ஒன்று பல்லகவுண்டன்பாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[6] மாரியம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்றும் இவ்வூரிலுள்ளது.
அரசியல்
பல்லகவுண்டன்பாளையம் பகுதியானது, பெருந்துறை (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads