பெருமாநல்லூர்
தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
பெருமாநல்லூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் திருப்பூர் மாவட்டத்திலுள்ள திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தின் பெருமாநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 344.91 மீ. உயரத்தில், (11.2055°N 77.3590°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பெருமாநல்லூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பெருமாநல்லூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 7,356 பேர் ஆகும். இதில் 3,740 பேர் ஆண்கள் மற்றும் 3,616 பேர் பெண்கள் ஆவர்.[3]
சமயம்
இந்துக் கோயில்கள்
கொண்டத்து காளியம்மன் கோயில்[4] என்ற அம்மன் கோயில் மற்றும் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிற அனுமந்தராய சுவாமி கோயில்[5] என்ற ஆஞ்சநேயர் கோயில் ஆகிய இந்துக் கோயில்கள் பெருமாநல்லூர் பகுதியில் அமைந்துள்ளன.
அரசியல்
பெருமாநல்லூர் பகுதியானது, திருப்பூர் வடக்கு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads