பொத்தேரி தொடருந்து நிலையம்

தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையம் From Wikipedia, the free encyclopedia

பொத்தேரி தொடருந்து நிலையம்map
Remove ads

பொத்தேரி தொடருந்து நிலையம் (Potheri railway station, நிலையக் குறியீடு:POTI) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை புறநகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இந்த நிலையம் சென்னைக் கடற்கரை - செங்கல்பட்டு வழித்தடத்தில் அமைந்துள்ளது. இது செங்கல்பட்டு மாவட்டத்தைச் சேர்ந்த தொடருந்து நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் பொத்தேரி, பொது தகவல்கள் ...

இது சென்னையின் புறநகர்ப் பகுதியான பொத்தேரி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்திற்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரை சந்திப்பிலிருந்து 43 கி.மீ. (27 மைல்) தொலைவில் அமைந்துள்ளது மற்றும் பொத்தேரியில் தேசிய நெடுஞ்சாலை - 45 இல் அமைந்துள்ளது. இது கடல் மட்டத்திலிருந்து 45மீ (148 அடி) உயரத்தில் உள்ளது.

Remove ads

வரலாறு

Thumb
பொத்தேரி ரயில் நிலையம் (நடை மேம்பாலத்தில் இருந்து படமெடுக்கப்பட்டது)

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடம் மின்மயமாக்கலுடன், சனவரி 9, 1965 அன்று இந்நிலையத்தில் உள்ள வழித்தடங்களும் மின்மயமாக்கப்பட்டன.[1]

இதன் எதிர்திசையிலேயே எஸ். ஆர். எம். பல்கலைக்கழகம் உள்ளதால், இந்நிலையம் கல்லூரி மாணவர்களின் போக்குவரத்துக்கு மிகவும் முக்கியமானதாக உள்ளது.

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads