இராஜகீழ்ப்பாக்கம்
தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராஜகீழ்ப்பாக்கம் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு (இதற்கு முன்னர் காஞ்சிபுரம்) மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 25.88 மீ. உயரத்தில், (12.9177°N 80.1557°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு இராஜகீழ்ப்பாக்கம் அமையப் பெற்றுள்ளது.
போக்குவரத்து
சாலைப் போக்குவரத்து
தமிழ்நாடு அரசின் தாம்பரம் கிழக்கு புறவழிச்சாலை திட்டம் மூலம், வாகனங்கள் சென்னை நகருக்கு உள்நுழையவும் மற்றும் சென்னை நகரிலிருந்து வெளியூர்களுக்கு செல்லவும் திட்டமிடப்பட்டுள்ள சாலை இராஜகீழ்ப்பாக்கம் வழியாகச் செல்லும்.[4]
சமயம்
இந்துக் கோயில்
ஸ்கந்தாஸ்ரமம் என்ற முருகன் கோயில் ஒன்று இப்பகுதியில் அமைந்துள்ளது.[5] சென்னகேசவ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்றும் இராஜகீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ளது.[6]
அரசியல்
இராஜகீழ்ப்பாக்கம் பகுதியானது, தாம்பரம் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, திருப்பெரும்புதூர் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[7]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads