கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்map
Remove ads

கருங்குழி, (Karunguzhi) தமிழ்நாட்டின் செங்கல்பட்டு மாவட்டத்தின், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். கருங்குழியில் உள்ள ரங்கநாதர் மலை சிறப்புப் பெற்றது.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

சென்னை - திருச்சி வழித்தடத்தில் அமைந்த கருங்குழி பேரூராட்சி, காஞ்சிபுரத்திலிருந்து 50 கி.மீ. தொலைவில் உள்ளது. இதனருகே அமைந்த தொடருந்து நிலையம் கருங்குழியில் உள்ளது. இதன் கிழக்கில் திருக்கழுகுன்றம் 24 கி.மீ.; மேற்கில் உத்திரமேரூர் 22 கி.மீ.; வடக்கில் செங்கல்பட்டு 22 கி.மீ.; தெற்கில் மதுராந்தகம் 5 கி.மீ. தொலைவில் உள்ளது.

பேரூராட்சியின் அமைப்பு

6 ச.கி.மீ. பரப்பும், 15 பேரூராட்சி மன்ற உறுப்பினரகளையும், 98 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி மதுராந்தகம் (சட்டமன்றத் தொகுதி)க்கும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டதாகும்.[3]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இப்பேரூராட்சி 3,075 வீடுகளும், 12,485 மக்கள்தொகையும் கொண்டது.

மேலும் இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 81.65% மற்றும் பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 999 பெண்கள் வீதம் உள்ளனர்.[4]

சிறப்புகள்

கருங்குழி பேரூராட்சி, தமிழ்நாட்டின் சிறந்த பேரூராட்சியாக முதல் பரிசை 15 ஆகத்து 2022 அன்று பெற்றது.[5]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads