சட்டக்காரி

From Wikipedia, the free encyclopedia

சட்டக்காரி
Remove ads

சட்டக்காரி (Chattakkari) என்பது 1974 ஆம் ஆண்டு வெளிவந்த இந்திய மலையாள மொழித் திரைப்படமாகும். கே. எஸ். சேதுமாதவன் இயக்கிய இத்திரைப்படத்தை எம்.ஓ.ஜோசப் தயாரித்துள்ளார். இப்படத்தில் இலட்சுமி, மோகன் சர்மா, அடூர் பாசி, சுகுமாரி ஆகியோர் நடித்திருந்தனர். இதே பெயரில் பம்மனின் புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு தோப்பில் பாசி என்பவர் இப்படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார்.[1][2]

விரைவான உண்மைகள் சட்டக்காரி, இயக்கம் ...

இது இலட்சுமியின் முதல் மலையாளப் படமாகும். சக நடிகரான மோகன் சர்மாவுடனான இவரது காதல் தொடங்கியது. இது சிறந்த நடிகைக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றது.இலட்சுமியின் குடிகார தந்தையாக நடித்த அடூர் பாசிக்கு சிறந்த நடிகருக்கான கேரள மாநில திரைப்பட விருதையும் , மலையாளத்தில் சிறந்த திரைப்படத்திற்கான பிலிம்பேர் விருதையும் இப்படம் வென்றது. சிறந்த கதைக்கான கேரள மாநில திரைப்பட விருதை கதாசிரியர் பம்மன் பெற்றார். பெங்களூரு திரையரங்கில் 40 வாரங்கள் தொடர்ந்து ஓடிய முதல் மலையாளப் படம் என்ற பெருமையும் இதற்கு உண்டு. பிரபல இசையமைப்பாளர் ஜி. தேவராஜன் இசையமைத்த அனைத்துப் பாடல்களும் வெற்றி பெற்றன.

2012 இல், இது அதே பெயரில் மறு ஆக்கம் (Remake) செய்யப்பட்டது. சந்தோஷ் சேதுமாதவன் இயக்கினார். ரேவதி கலாமந்திர் சின்னத்தின் கீழ் சுரேஷ் குமார் தயாரித்தார். ஷாம்னா காசிம் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தார்.

Remove ads

கதைச்சுருக்கம்

சட்டக்காரி ஒரு ஆங்கிலோ-இந்தியப் பெண் (இலட்சுமி ) மற்றும் ஒரு இந்து பையனின் (மோகன் ஷர்மா) உறவை நிறைவு செய்யும் காதல் கதை. இரகசிய திருமணமணம் செய்துகொண்ட அவளுக்கு ரகசியமாக ஒரு குழந்தை பிறந்தது.

சுருக்கம்

ஜூலி ஒரு ஆங்கிலோ-இந்திய இரயில் ஓட்டுனர் மோரிசின் மூத்த மகள். உசா அவரது நெருங்கிய தோழி. உசா ஒரு மரபுவழி இந்து வாரியர் குடும்பத்தைச் சேர்ந்தவர். உசாவின் இல்லத்தில் அவள் (ஜூலி) வேறு இடத்தில் படிக்கும் அவள் தம்பி சசியை சந்திக்கிறாள். ஜூலி விரைவில் சசியை காதலிக்கிறாள். அது உசாவுக்கும் தெரியும். உறவு மிகவும் நெருக்கமாகிறது. ஜூலி கருவுருகிறார். குடிகார தந்தை மோரிஸ் விரைவில் இறந்துபோகிறார். ஜூலி தனது தாயின் அத்தை வசிக்கும் தொலைதூர இடத்திற்கு அழைத்துச் செல்லப்படுகிறார். அங்கு அவளுக்கு ஆண் குழந்தை பிறக்கிறது.

இங்கிலாந்துதான் தங்களின் உண்மையான தாய்நாடு என்று உணர்ந்த ஜூலியின் தாய், இங்கிலாந்துக்கு குடிபெயர முடிவு செய்கிறார். விரைவில் ஜூலி உசாவிடம் மனம் விட்டு பேசுகிறார். தன்னை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கும் சசியையும் சந்திக்கிறாள். ஆனால் சசியின் ஆச்சாரமான அம்மா அவளை முற்றாக நிராகரிக்கிறார். சசியின் தந்தை வாரியர் அவரிடம் கேள்வி எழுப்புகிறார், மேலும் சசி ஜூலியின் வாழ்க்கையை சீரழித்ததில் தனது பங்கு பற்றி ஒப்புக்கொள்கிறார்.

வாரியர் பின்னர் ஜூலியின் குடும்பத்தாருக்குப் பொருட்களை மூட்டை கட்டுவதில் உதவுகிறார். ஒரு சிறிய பிரியாவிடைக்காக அவர்களை தனது வீட்டிற்கு அழைக்கிறார். இங்கே அவர் தனது மனைவியையும் அவரது மகள் உசாவையும் அறிமுகப்படுத்துகிறார். உசா தனது கைகளில் ஒரு சிறிய குழந்தையுடன் வெளியே வந்தாள். ஜூலி அதை தன் குழந்தையாக அடையாளம் கண்டுகொண்டாள்.. ஜூலியை மருமகளாக ஏற்றுக்கொள்வதில் தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எந்தத் தயக்கமும் இல்லை என்றும், மோரிஸ் குடும்பத்தை இந்தியாவில் தங்குவதற்கு ஊக்குவிப்பதாகவும் வாரியர் கூறுகிறார்.

Remove ads

நடிகர்கள்

ஒலிப்பதிவு

ஜி.தேவராஜன் இசையமைத்துள்ள இப்படத்தின் வரிகளை வயலார் ராமவர்மா, உஷா உதுப் ஆகியோர் எழுதியுள்ளனர்.

மேலதிகத் தகவல்கள் இல்லை., பாடல் ...
Remove ads

தயாரிப்பு

எழுத்து மற்றும் நடிப்பு

சென்னையில் வெளியாகும் ஜெய் கேரளாம் என்ற வார இதழில் பம்மன் கதை வெளியானது. தயாரிப்பாளர் எம்.ஓ.ஜோசப் உரிமையை வாங்கினார். இப்படத்திற்காக இயக்குநர் கே.எஸ்.சேதுமாதவன், ஒளிப்பதிவாளர் பாலு மகேந்திரா மற்றும் வசனகர்த்தா தோப்பில் பாசி ஆகியோரை ஒப்பந்தம் செய்தார். இலட்சுமியை கதாநாயகியாவும், பிஎன் மேனனின் கலைப் படத்தில் நடித்த மோகனை கதாநாயகனாகவும் இயக்குநர் பரிந்துரைத்தார். படத்தில் இலட்சுமியின் அம்மாவாக சுகுமாரி நடித்திருந்தார். படம் முழுவதும் குட்டைப் பாவாடை அணிந்த ஆங்கிலோ இந்தியப் பெண்ணாக இலட்சுமி நடித்தார், அது அவருடைய பாலியல் அடையாளமாகவும் மாற்றியது. உணர்வுப்பூர்வமான பாடல்கள் மற்றும் இளஞ்சோடிகள் ஆகியவை இப்படம் வணிகரீதியாக வெற்றிபெற உதவியது.

படத்தின் முடிவு புத்தகத்தில் இருந்து வேறுபட்டது. புத்தகத்தில் இந்து பையன் கர்ப்பமாக இருக்கும் தனது ஆங்கிலோ இந்திய காதலியை விட்டு வெளியேறுகிறான், திரும்பி வரமாட்டான், ஆனால் படத்தில், அவன் அவளை ஏற்றுக்கொள்ள திரும்பி வருகிறான். ஜூலி நிராகரித்த ரகீம் என்பவன், அவளது தந்தை மோரிசுக்கு சாராயம் கொடுத்து செல்வாக்கு செலுத்த முயற்சிக்கிறான், இதனால் மோரிசு இரத்த வாந்தி எடுத்து இறந்துவிடுகிறார். படத்தில் ரகீமுக்கு முதியவரின் மரணத்தில் பங்கு இல்லை.

படப்பிடிப்பு

தென்னக ரயில்வேயின் புகழ்பெற்ற ரயில் சந்திப்பான சோரனூர் சந்திப்பில் குறிப்பாக நீராவி இரயில் இஞ்சின் ஓடிய காலத்தில் படமாக்கப்பட்டது. சோரனூரில் மிகப்பெரிய நீராவி இன்ஜின் பட்டறை ஒன்றும் இருந்தது.

Remove ads

மறு ஆக்கங்கள்

இந்தி மறு ஆக்கம் 1975 ஆம் ஆண்டு வெளிவந்து மிகவும் பிரபலமானது. ஜூலி (1975) திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் இலட்சுமி தனது பாத்திரத்தில் மீண்டும் நடித்தார். சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் வென்றார். இப்படத்திற்கு இராஜேஷ் ரோஷன் இசையமைத்ததன மூலம் அவருக்கு பிலிம்பேர் சிறந்த இசையமைப்பாளர் விருது கிடைத்தது. மேலும் அவரது "தில் க்யா கரே" மற்றும் "மை ஹார்ட் இஸ் பீட்டிங்" பாடல்கள் இன்னும் மனதில் நிற்பவை ஆகும். ஜூலியின் அம்மாவாக நடித்ததற்காக சிறந்த துணை நடிகைக்கான பிலிம்பேர் விருதை நாதிரா பெற்றார். ஜூலியின் தங்கையாக ஸ்ரீதேவி நடித்துள்ளார் .

ஓ மானே மானே என்ற தமிழ் மறு ஆக்கத்தில் ஊர்வசி நாயகியாகவும், மோகன் அவரது காதலனாகவும் நடித்திருந்தனர்.

மிஸ் ஜூலி பிரேமா கதா (1975) என்ற தெலுங்கு மறு ஆக்கத்திலும் இலட்சுமி நடித்தார். சட்டக்காரிக்கு ஆங்கிலம் அம்மோயி என தெலுங்கு மொழிமாற்றமும் இருந்தது

ஜூலி (2006) என்ற கன்னட மறு ஆக்கத்தில் இரம்யா ஜூலியின் கதாநாயகியாகவும், டினோ மோரியா கதாநாயகனாகவும் நடித்தனர், ஆனால் படம் சரியாக ஓடவில்லை.

இப்படம் 2012ல் அதே பெயரில் மலையாளத்தில் மறுஆக்கம் செய்யப்பட்டது. அசல் பதிப்பை இயக்கிய கே.எஸ்.சேதுமாதவனின் மகன் சந்தோஷ் சேதுமாதவன் இந்த மறுஆக்கத்தை இயக்கியுள்ளார். இந்த மறுஆக்கத்தை ரேவதி கலாமதிர் சின்னத்தில் சுரேஷ் குமார் தயாரித்துள்ளார். 25 நாட்களில் படமாக்கப்பட்டு, மலையாள சினிமாவில் புதிய சாதனை படைத்தது.[3] இது செப்டம்பர் 2012 இல் வெளியிடப்பட்டது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads