தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 1 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 1 (National Highway 1 அல்லது NH 1) பாக்கித்தான் எல்லை அருகே இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தின் அட்டாரி நகரி என்ற நகரையும் இந்தியாவின் தலைநகரான புது தில்லியையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையாகும். துவக்கத்தில் இச்சாலை லாகூரிலிருந்து வங்காளம் வரை நீண்டிருந்தது. இச்சாலை ஷெர் ஷா சூரியின் காலத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இது கிராண்ட் ட்ரங்க் ரோடு என்ற சாலையின் ஒருபகுதியாகும்.[1] ஒரு பகுதி, வடக்குப்பகுதியில் அமைந்துள்ள சாலை தேசிய நெடுஞ்சாலை 1 (NH 1) எனவும் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளதை தேசிய நெடுஞ்சாலை 2 (NH 2)என தேசிய நெடுஞ்சாலை துறை பிரித்துள்ளது. இச்சாலை மிகவும் பழமையான ஒன்று.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...
Remove ads

சாலை அமைப்பு

தேசிய நெடுஞ்சாலை 1 அமிர்தசரஸ், ஜலந்தர், லூதியானா, ராச்புரா, அம்பாலா, குருச்சேத்திரம், கர்னால், பானிப்பட், சோனிபட், மற்றும் தில்லி போன்ற நகரங்களுக்கு ஊடாகச் செல்கின்றது. இச்சாலை 456 கி.மீ (283 மைல்) நீளம் கொண்டது. இந்த வழியில்தான் தில்லி-லாகூர் பேருந்து வசதி நடைபெருகிறது. இச்சாலை ஒரே அளவாக இல்லாமல் வாகா எல்லையிலிருந்து ஜலந்தர் வரை 4 வழிச்சாலையாகவும், ஜலந்தரிலிருந்து சோனிபட் மற்றும் தலைநகர் டெல்லி சந்திப்பு வரை 6 வழிப்பாதையாகவும், அதன்பின்னர் 8 வழிப்பாதையாகவும் அமைந்துள்ளது.

Remove ads

மேற்கோள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads