பகலவி வம்சம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பகலவி வம்சம் (Pahlavi dynasty) (Persian: دودمان پهلوی) ஈரான் நாட்டை 1925 முதல் 1979 முடிய ஆண்ட இறுதி அரச மரபாகும்.[2]
[3].
1925-இல் ஈரான் நாட்டை ஆண்ட குவாஜர் வம்ச மன்னர் அகமது ஷா வீழ்த்தி பகலவி வம்சத்தை நிறுவியவர் ஈரானிய முன்னாள் இராணுவத் தலைவர் ரேசா ஷா பகலவி ஆவார். ரேசா ஷா பகலவி 1941 முடிய ஈரான் நாட்டின் மன்னராக விளங்கினார்.
இவருக்குப் பின் இவரது மகன் முகம்மத் ரிசா ஷா பஹ்லவி 1941-இல் ஆட்சிக்கு வந்தார். 1979-இல் இசுலாமிய சியா பிரிவு சமயத் தலைவரான ரூஃகூல்லா மூசவி கொமெய்னி தலைமையில் நடைபெற்ற ஈரானிய மக்கள் புரட்சியால், மன்னர் முகமது ரேசா ஷா பகலவி நாட்டை விட்டு வெளியேறி ஐக்கிய அமெரிக்கா நாட்டில் புகலிடம் அடைந்தார். இதன் மூலம் ஈரானில் 2,500 ஆண்டுகளாக நடைபெற்ற முடியாட்சி முறை ஒழிக்கப்பட்டு, ஜனநாயக நடைமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. [4]
Remove ads
இதிகாச புராணங்களில்
பண்டைய பாரசீகத்திலிருந்து பரத கண்டத்தின் மேற்கு, வடமேற்கு, தென் மேற்கு மற்றும் மத்தியப் பகுதிகளில் குடியேறிய பகலவி வம்சத்தினர்களான பகலவர்கள் குறித்தான செய்திகள் புராணங்கள், இராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இதிகாசங்கள் மற்றும் மனுதரும சாஸ்திரத்தின் மூலம் அறியப்படுகிறது.
இதனையும் காண்க
- அகாமனிசியப் பேரரசு - கிமு 550 – கிமு 330
- பார்த்தியப் பேரரசு - கி மு 247 – கி பி 224
- செலூக்கியப் பேரரசு - கி.மு. 312 – கி.மு. 63
- சாசானியப் பேரரசு - கிபி 224 – 651
- உதுமானியப் பேரரசு - 1299 – 1500
- சபாவித்து வம்சம் - கிபி 1501 – 1736
- அப்சரித்து வம்சம் - கிபி - 1736 - 1796
- குவாஜர் வம்சம் - கிபி 1796–1925
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads