பிராம்மி (சப்தகன்னியர்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

பிராம்மி என்பவர் இந்து சமயத்தின் சப்தகன்னியர்களுள் முதன்மையானவராவார். இவர் சாவித்திரியை என்றும் பிராம்ஹி என்றும் அழைக்கப்படுகின்றார்.

தோற்றம்

Thumb
பிராம்மி அம்மன் சிலை, குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகம்.

சிவன் அந்தகாசூரன் எனும் அரக்கனுடன் போர் புரிந்த பொழுது அரக்கனுடைய இரத்ததிலிருந்து பல அரக்கர்கள் தோன்றினர். அதனால் பிரம்மா, விஷ்ணு, சிவன், வராக அவதாரம், இந்திரன், முருகன், சண்டி என்ற அனைவருமே தங்களுடைய அம்சமான கன்னியரை தோற்றுவித்தனர். அப்பொழுது பிரம்மாவினால் தோற்றுவிக்கப்பட்டவரே பிராம்மி ஆவார்.

இவர் நான்கு கரங்களை உடையவராகவும், கரங்களில் வரதம், அபயம், கமண்டலம், அட்சமாலிகை ஆகியவற்றை தரித்தும் காட்சியளிக்கிறார். பிரம்மாவின் மனைவியான சரஸ்வதியை போல அன்னப்பறவையை வாகனமாக கொண்டவர். அத்துடன் அன்னப் பறவையை கொடியாகவும் கொண்டவர். வெண்ணிற ஆடை அணிந்தவராகவும், ஸ்படிக மாலையை ஆபரணமாக தரித்தவராகவும் உள்ளார். [1]

Remove ads

பாடல்

பேசவாம் புகழ்ப் பிராமி என்று உரைப்பவர் தான்தோன்
றீச நாதனை இமையவர் வாழ நஞ்சுண்டு
நாசமில்லியை நலந்தரு பூசனை ஆற்றித்
தேசமைந்த பல்வரத்தொடு சிறப்பெலாம் பெற்றாள்.

இவற்றையும் காண்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads