மகாகாசியபர்
கௌதம புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மகாகாசியபர் (Mahākāśyapa) (சமசுகிருதம்; பாலி: Mahākassapa; ஜப்பான்: 摩訶迦葉 Maha Kasho or Makakasho or Kāśyapa) புத்தரின் பத்து முதன்மை சீடர்களில் ஒருவர். மகாகாசியபர் கௌதம புத்தரிடமிருந்து முதலில் ஞானத்தை பெற்றவர்[2] இவரே முதலாம் பௌத்த சங்கத்தின் பிக்குகளின் பேரவையை கூட்டியவர். பிக்குகள் கடைபிடிக்க வேண்டிய துறவற நெறிகளை வகுத்தவர். [3]இவர் வட இந்தியாவின் மகத நாட்டைச் சேர்ந்தவர்.

Remove ads
தொன்ம வரலாறு
வேதிய சமூகத்தைச் சார்ந்த துறவியான மகாகாசியபர், புத்தர் ஞானம் பெற்றவுடன், புத்தரின் முதல் சீடராகி சாரநாத்தில் மக்கள் முன்னிலையில் புத்தர் ஆற்றிய முதல் சொற்பொழிவில் கலந்து கொண்டவர். இவரும் புத்தரின் வேறு முதன்மை சீடரான ஆனந்தருடன் அறியப்படுபவர்.
தாமரை சூத்திரம்
தாமரை சூத்திரம் (Lotus Sutra) அத்தியாயம் ஆறில் மகாகாசியபர், மௌத்கல்யாயனர், காத்தியாயனர் போன்ற புத்தரின் முதன்மைச் சீடர்கள் ஞானம் பெற்ற நிகழ்வு கூறப்படுகிறது.
ஜென் புத்த சமயப் பிரிவு
மகாகாசியபரின் போதனை அடிப்படையில் போதி தருமன் துவக்கியதாக கருதப்படும் ஜென் பௌத்தம் தோன்றியது.[4]
மேற்கோள்கள்
வெளி இணப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads