மத்வ பிராமணர்கள்
இந்தியாவில் உள்ள ஓர் இனக்குழு From Wikipedia, the free encyclopedia
Remove ads
மத்வ பிராமணர்கள் (Madhva Brahmins) அல்லது மத்துவர்கள் (மேலும் மாத்வ பிராமணர்கள் அல்லது மாத்வர்கள் என்று உச்சரிக்கப்படும் இவர்கள் துவைதத்தை நிலைநாட்டிய மத்துவாச்சாரியரை பின்பற்றும் இந்தியாவின் இந்து பிராமணச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர்கள் சாத் வைணவத்தை பின்பற்றுபவர்கள் என்பதால் இவர்கள் சாத்-வைணவர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.[1] இவர்கள் பெரும்பாலும் இந்திய மாநிலங்களான தெலங்காணா, கர்நாடகா, மகாராட்டிரா, கோவா, தமிழ்நாடு மற்றும் ஆந்திராவில் காணப்படுகின்றனர் .
Remove ads
வரலாறு
மத்வ சமூகம் அதன் தத்துவ தோற்றத்தை 13 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த வைணவ ஆச்சாரியரான மத்வாச்சாரியரிடம் காண்கிறது . உடுப்பியின் எட்டு மடங்கள் மத்வாச்சாரியரால் நிறுவப்பட்டது. மத்வாச்சாரியருக்குப் பிறகு மடங்களை நிறுவிய மற்ற ஆச்சாரியர்களில் பத்மநாப தீர்த்தர், நரஹரிதீர்த்தர், அக்சோபிய தீர்த்தர், ஜெயதீர்த்தர், சிறீபாதராஜ தீர்த்தர், வியாசதீர்த்தர், வாதிராஜ தீர்த்தர், விஜயேந்திர தீர்த்தர், இராகவேந்திர தீர்த்தர் போன்றவர்கள் அடங்குவர் .[2] மத்வத் தத்துவத்தின் இணைப்புகள் தெற்கில் உடுப்பி முதல் வட இந்தியாவில் துவாரகை வரை கோயில்கள் மற்றும் மடங்கள் வடிவில் நீட்டிக்கப்பட்டுள்ளன.[3]
உடுப்பி நகரம் 13 ஆம் நூற்றாண்டின் கிருட்டிணர் கோயிலுக்கு பிரபலமானது. மனித ஆத்மா கடவுளின் கிருபையால் காப்பாற்றப்படுவதாகவும், உண்மையான பக்தர்களுக்கு கடவுள் காட்சி அளிக்கிறார் என்றும் மத்வர்கள் நம்புகிறார்கள். பக்தி வழிபாடு மத்வர்களின் வாழ்க்கையில் முக்கியமானது.[4]
தொழில்கள்
17 ஆம் நூற்றாண்டில் கோல்கொண்டாவின் சுல்தானக ஆட்சியின் போது, பல தேசஸ்த் மத்வ பிராமணர்கள், ஆந்திரா மற்றும் தெலங்காணா மாவட்டங்களில் தேசுமுக், தேசுபாண்டே, மசூம்தார், மன்னவர் போன்ற உயர் நிர்வாக பதவிகளை வகித்தனர்.[5]
Remove ads
புள்ளிவிவரங்கள்
கர்நாடகாவில், துவைதத் தத்துவத்தைப் பின்பற்றும் பிராமணச் சமூகங்கள் தேசஸ்த் பிராமணர்கள், சிவல்லி பிராமணர்கள்,[6] கோட்டா பிராமணர்கள், பதகநாடு பிராமணர்கள், ஆரவேலு பிராமணர்கள், கன்னட கம்மே, உலுச்சுகம்மே (உல்ச்சா) பிராமணர்கள்,[7] ஆரவந்துவக்கலு பிராமணர்கள் ஆகியோர் .[8] தமிழ்நாட்டில், மத்வாச்சாரியரின் தத்துவத்தைப் பின்பற்றும் பிராமண சமூகங்கள் தேசஸ்தாக்கள், ஆரவந்துவக்கலு, படகநாடு, ஆருவேலா பிராமணர்கள், பென்னத்துரார் பிராமணர்கள், பிரதமசாகி பிராமணர்கள், படக பிராமணர்கள் ஆகியோர் அடங்குவர்.[9] பீகாரில், கயாவால் பிராமணர்கள் துவைதத் தத்துவத்தைப் பின்பற்றுகிறார்கள்.[10][11] கோவாவில், துவைத தத்துவத்தைப் பின்பற்றுபவர்களாக கவுட சாரஸ்வத் பிராமணர் உள்ளனர். சால்செட் அங்குள்ள மத்வ சாரஸ்வத்தின் கோட்டையாகும். மேலும் அவர்கள் விஷ்ணுவின் தீவிர பக்தர்கள்.[12] [13]
கர்நாடகா, கடலோர மகாராட்டிரா மற்றும் கோவாவில் மத்வாச்சாரியரின் துவைத தத்துவத்தைப் பின்பற்றும் தெய்வத்ன பிராமணர்கள் என்ற ஒரு பிரிவு உள்ளது.[14][15]
கேரளாவில், மத்வாச்சாரியரின் துவைத வேதாந்தத்தைப் பின்பற்றும் எம்ப்ராந்திரிகள் உள்ளனர். குறிப்பாக மத்திய கேரள பிராந்தியத்தில் மத்வ சம்பிரதாயத்தைப் பின்பற்றும் பிராமணர்களின் பிற பிரிவுகளும் உள்ளன.[16]
Remove ads
சமூகம் மற்றும் கலாச்சாரம்
மொழி
பிரதான தெற்கு திராவிட மொழிகள் குழுவின் முக்கிய மொழிகளில் ஒன்றான கன்னடத்தை பெரும்பான்மையான மத்வர்கள் பேசுகிறார்கள். மத்வ பிராமணர்கள் பலவிதமான கன்னடங்களைப் பேசுகிறார்கள்.[17] கன்னடம் அல்லாத மாநிலங்களில் கூட இவர்கள் தங்கள் வீடுகளில் கன்னடம் பேசுகிறார்கள். ஆனால் வெளியாட்களுடன் அவர்கள் அந்த மாநிலத்தின் சொந்த மொழியைப் பேசுகிறார்கள்.[18] மராத்தி, கன்னடம், தெலுங்கு மற்றும் தமிழ் பேசும் மத்வ பிராமணர்கள் தேசஸ்தா மத்வ பிராமணர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் மகாராட்டிராவிலும் தென்னிந்தியா முழுவதும் பரவி வருகின்றனர்.[19] துளு பேசும் மத்வ பிராமணர்கள், சிவள்ளி மத்வ பிராமணர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் கரையோர மாவட்டங்களான உடுப்பி, இன்றைய கர்நாடக மாநிலத்தின் தெற்குப் பகுதி, காசர்கோடு மற்றும் கேரள மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ளனர். கொங்கணி பேசும் மத்வ பிராமணர்கள் கவுட சாரஸ்வத் பிராமணர் எனப்படுகின்றனர். இவர்கள் கரையோர கர்நாடகா, கோவா மற்றும் கேரளா முழுவதும் பரவியுள்ளனர்.[20] பிகாரி, மாககி மற்றும் இந்தி பேசும் மத்வ பிராமணர்கள் கயாவல் பிராமணர்கள் எனப்படுகின்றனர். இவர்கள் கயா மற்றும் வாரணாசி முழுவதும் பரவியுள்ளனர்.[21][13]
சிவள்ளி மற்றும் தேஸ்தா மத்வர்கள் பிற சமூகங்களால் கடவுளின் சேவைகளுக்காக அதிகம் தேடப்படுகிறார்கள். கவுட சாரஸ்வத் மத்வர்கள் ஒரு மத ரீதியாக தன்னிறைவான சமூகமாகும். இந்த மூன்று துணைப்பிரிவுகளுக்கும் இடையே ஏராளமான கலாச்சார வேறுபாடுகள் உள்ளன.[22]
உணவு முறை
இவர்கள் தூய சைவ உணவு உண்பவர்கள். மேலும் இவர்களின் பிரதான தானியம் அரிசி மற்றும் கோதுமை போன்றவை.[23] உடுப்பி சமையல் என்பது மத்வ உணவுக்கு ஒத்த பெயர். இது கர்நாடகாவின் ஒரு முக்கிய சைவ உணவு வகையாகும். இதில் தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள் மற்றும் மசாலாப் பொருட்கள் உள்ளன.[24]
வழக்கமான மத்வ சமையல் வகைகளில் ரசம், சாம்பார் , புளிக்குழம்பு மற்றும் அரிசி ஆகியவை உள்ளன.[25] புளிக்குழம்பு பொதுவாக முழு மத்வ சமூகத்திற்கும் ஒரு பிரியமான உணவாகும்.[26] இனிப்புகளில், அயக்ரீவா என்பது பெரும்பாலான மத்வ பிராமண வீடுகளில் தயாரிக்கப்படும் மிகவும் பொதுவான இனிப்பு உணவாகும். இது வெல்லம் மற்றும் தேங்காயுடன் வங்காள கிராம் பயன்படுத்தி தயாரிக்கப்படுகிறது.[27]
Remove ads
சமூக மற்றும் அரசியல் பிரச்சினைகள்
2017 ஆம் ஆண்டில், கர்நாடக அரசு மூடநம்பிக்கைக்கு எதிராக நிலைப்பாட்டை எடுத்து, கர்நாடக தடுப்பு மற்றும் மனிதாபிமானமற்ற தீய நடைமுறைகளை ஒழித்தல் மற்றும் அமானுஷ்ய சக்திகளை அல்லது தீய மற்றும் சுயநல நோக்கங்களுக்காக மந்திரத்தை பயன்படுத்துவதை தடுக்கும் மசோதா, 2017 ஆகியவற்றை சட்டசபையில் அறிமுகப்படுத்துவதன் மூலம் அனைத்து தீய நடைமுறைகளையும் தடை செய்ய திட்டமிட்டது. பல விவாதங்களுக்குப் பிறகு, மத்வ பிராமணர்களின் 'முத்ரதாரணம்' போன்ற நடைமுறைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறையின்படி, வழக்கமாக தங்கம் அல்லது தாமிரத்தால் செய்யப்பட்ட 'முத்திரைகள்' தீயில் சூடாக்கப்பட்டு உடலில் குத்தப்படுகின்றன.[28]
Remove ads
குறிப்பிடத்தக்க நபர்கள்
- திவான் பூர்ணையா (1746-1812) - ஐதர் அலி, திப்பு சுல்தான் மற்றும் உடையார் ஆகிய மூன்று ஆட்சியாளர்களின் கீழ் மைசூர் அரசில் திவானாக இருந்தார். மேலும் எலந்தூர் தோட்டத்தின் நிறுவனரும் ஆவார்.
- வெ.கிருட்டிணசாமி ராவ் (1845 - 1923) - திருவிதாங்கூரின் திவான் 1898-1904 வரை.
- பி.என்.கிருட்டிணமூர்த்தி (1849 - 1911) - மைசூர் மாநிலத்தின் திவான் மற்றும் எலந்தூர் தோட்டத்தின் 5 வது சாகிர்.
- குமார வியாசர் (1419-1446) - கன்னடக் கவிஞர்,கன்னட மொழியில் 15 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் செல்வாக்கும், பாரம்பரியமும் கொண்டவர். இவரது இயற்பெயர் நாரணப்பா என்பதாகும். கன்னடத்தில் மகாபாரதத்தை எளிய நடையில் மொழிபெயர்த்துள்ளார்.
- காஞ்சீவரம் அயாவதான ராவ் (1865 - 1946) - ஓர் இந்திய வரலாற்றாசிரியரும், அருங்காட்சியகவியலாளரும், மானுடவியலாளரும், பொருளாதார நிபுணரும் மற்றும் பன்மொழிப் புலமைக் கொண்டவர். இவர் பேரரசின் மானுடவியல் நிறுவனம், இந்திய வரலாற்று பதிவுகள் ஆணையம் மற்றும் பேரரசின் பொருதாரச் சங்கத்தின் உறுப்பினராக இருந்தார்.[29][30]
- பீம்சென் ஜோஷி (1922 - 2011) - இந்துஸ்தானி இசைப் பாரம்பரியத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய பாடகரும், பாரத ரத்னா மற்றும் பத்மசிறீ விருது பெற்றவர்.
- டி.ஆர்.ராமச்சந்திரன் (1917 - 1990) - 1940 களில் இருந்து 1960 கள் வரை முன்னணி மற்றும் துணை வேடங்களில் நடித்த ஒரு தமிழ் நடிகரும் நகைச்சுவையாளரும் ஆவார்.
- கிருட்டிண குமாரி (6 மார்ச் 1933 - 24 ஜனவரி 2018) - 1960 மற்றும் 1980 களின் முன்னணி தெலுங்கு நடிகை.
- காசிநாத் (8 மே 1951 - 18 ஜனவரி 2018) - கன்னடப் படங்களில் முதன்மையாக பணியாற்றிய இந்திய நடிகரும் திரைப்படத் தயாரிப்பாளரும் ஆவார்.[31]
- ஆலுரு வெங்கட ராவ் (1880 - 1964) - ஓர் இந்திய புரட்சியாளர், வரலாற்றாசிரியர், எழுத்தாளர் மற்றும் பத்திரிகையாளர்.
- பல்லடம் சஞ்சிவ ராவ் (1882-1962) - ஓர் இந்திய புல்லாங்குழல் கலைஞரும் கர்நாடக இசைக்கலைஞரும் ஆவார்.
- வி.கே.ஆர் வரதராஜ ராவ் - (1908 - 1991) - ஓர் இந்திய பொருளாதார நிபுணர், அரசியல்வாதி மற்றும் கல்வியாளர்.
- யு.ஆர்.அனந்தமூர்த்தி (1932 - 2014) - கன்னட மொழியில் சமகால எழுத்தாளர் மற்றும் விமர்சகர்; ஞானபீட விருது மற்றும் பத்ம பூசண் வென்றவர்.[32]
- சிகாரிபுரா இரங்கநாத ராவ் (1922 - 2013) - குசராத்தில் துறைமுக நகரமான லோத்தல் மற்றும் பேட் துவாரகை உள்ளிட்ட பல சிந்துவெளி நாகரிகத் தளங்களை கண்டுபிடித்த பெருமைக்குரிய அணிகளை வழிநடத்திய இந்திய தொல்பொருள் ஆராய்ச்சியாளர் .
- வீணை சேசன்னா (1852 - 1926) - வீணைக் கலைஞர். இவர் பாரம்பரிய கர்நாடக இசை பாணியில் வாசித்தார். மைசூர் அரசவையில் ஒரு இசைக்கலைஞராக இருந்தார்.
- சகா ராம ராவ் - தென்னிந்திய சித்ரவீணை (கோட்டு வாத்தியம்) கச்சேரிகளுக்கு மீண்டும் அறிமுகப்படுத்திய பெருமைக்குரிய இந்திய இசைக்கலைஞர்.
- புரந்தரதாசர் (1484–1564) - ஒரு விஷ்ணு பக்தர். இவர் கர்நாடக இசையின் பிதாமகர் என்று பரவலாகக் குறிப்பிடப்படுகிறார்.
- நவரத்ன இராம ராவ் (1877 - 1960) - கர்நாடகாவைச் சேர்ந்த இந்திய எழுத்தாளர் மற்றும் அறிஞர்.
- வியாசதீர்த்தர் - ஒரு துவைதத் துறவி மற்றும் கிருட்டிணதேவராயரின் ராஜகுரு.
- வாதிராஜ தீர்த்தர் - ஒரு துவைதத் தத்துவஞானி, கவிஞர் மற்றும் ஆன்மீகவாதி. இவர் சோதே மடத்தின் தலைவர்.
- சத்யதர்ம தீர்த்தர் (1743-1830) - வேதாந்தத்தின் துவைதத் தத்துவத்தின் அறிஞர், துறவி மற்றும் ஆன்மீகவாதி; உத்தராதி மடத்தின் 28 வது தலைவர்.
Remove ads
மேலும் காண்க
குறிப்புகள்
நூலியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads