மீஞ்சூர்

From Wikipedia, the free encyclopedia

மீஞ்சூர்map
Remove ads

மீஞ்சூர் (ஆங்கிலம்: Minjur) இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்தில் இருக்கும் ஒரு பேரூராட்சி ஆகும். மீஞ்சூர் ஊராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் மீஞ்சூரில் இயங்குகிறது. மீஞ்சூர், காஞ்சி மாநகரைப் போன்று, கோவில்கள் நிறைந்த தலம் என்பதால், இதனை, வடகாஞ்சி என்றும் அழைப்பர். இங்குள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் திருவிழா, பத்து நாட்கள் மிகச் சிறப்பாக நடைபெறும்.

விரைவான உண்மைகள்
Remove ads

அமைவிடம்

பொன்னேரி வட்டத்தில் அமைந்த மீஞ்சூர், திருவள்ளூரிலிருந்து 54 கி.மீ. தொலைவில் உள்ளது. மீஞ்சூரில் தொடருந்து நிலையம் உள்ளது. இதனருகே, கிழக்கில் எண்ணூர் 10 கி.மீ.; மேற்கில் சோழவரம் 10 கி.மீ.; வடக்கில் பொன்னேரி 10 கி.மீ.; தெற்கில் சென்னை 20 கி.மீ. தொலைவில் உள்ளன.

பேரூராட்சியின் அமைப்பு

8.28 ச.கி.மீ. பரப்பும், 18 பேரூராட்சி மன்ற உறுப்பினர்களையும், 562 தெருக்களையும் கொண்ட இப்பேரூராட்சி பொன்னேரி (சட்டமன்றத் தொகுதி) மற்றும் திருவள்ளூர் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டதாகும்.[4]

மக்கள் தொகை பரம்பல்

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இப்பேரூராட்சி 7,048 வீடுகளும், 28,337 மக்கள்தொகையும், கொண்டது. மேலும், இப்பேரூராட்சியின் எழுத்தறிவு 87.88% மற்றும் பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு, 1000 பெண்கள் வீதம் உள்ளனர்.[5]

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 13.27°N 80.27°E / 13.27; 80.27 ஆகும்.[6] கடல் மட்டத்திலிருந்து இவ்வூர், சராசரியாக 11 மீட்டர் (36 அடி) உயரத்தில் இருக்கின்றது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads