மெந்தகாப் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மெந்தகாப் தொடருந்து நிலையம் (ஆங்கிலம்: Mentakab Railway Station மலாய்: Stesen Keretapi Mentakab); சீனம்: 文德甲火车站 என்பது மலேசியா, பகாங், தெமர்லோ மாவட்டம், மெந்தகாப் நகரில் உள்ள ஒரு தொடருந்து நிலையம் ஆகும். இந்த நிலையம் மெந்தகாப், தெமர்லோ, பெந்தோங், கெந்திங் மலை மற்றும் அதன் சுற்றுப்புறங்களுக்குச் சேவை செய்கிறது.[2]
மலேசியக் கிழக்கு கடற்கரை தொடருந்து சேவையின் தீபகற்ப மலேசிய கிழக்கு கரை வழித்தடத்தில் (KTM East Coast Railway Line) இந்த நிலையம் உள்ளது. மலேசியாவில் அதிக அளவிலான பயணிகளைக் கொண்ட தொடருந்து நிலையங்களில் இதுவும் ஒன்றாகும்.[3]
Remove ads
தொடருந்து சேவைகள்
இந்த நிலையம் கேடிஎம் இண்டர்சிட்டி (KTM Intercity) தொடருந்து சேவைகளை வழங்கி வருகிறது. தீபகற்ப மலேசியாவின் கிழக்கு கரை பகுதியின் கிளாந்தான் மாநிலத்தின் தும்பாட் தொடருந்து நிலையம் தொடங்கி நெகிரி செம்பிலான் கிம்மாஸ் தொடருந்து நிலையம் (Tumpat–Gemas) வரையிலான நிலையங்களில் இருந்து வரும் தொடருந்துகள் இந்த மெந்தகாப் நிலையத்தைக் கடந்து செல்கின்றன.
Remove ads
மெந்தகாப் நகரம்
மெந்தகாப் (Mentakab) பகாங் மாநிலத்தில், தெமர்லோ மாவட்டத்தில் உள்ள நகரம். இந்த நகரம் முன்பு பாசிர் ராவா என்று அழைக்கப்பட்டது. பின்னர் பெயர் மாற்றம் பெற்று மெந்தகாப் என்று அழைக்கப்படுகிறது.
இந்த நகரம் தெமர்லோ, லஞ்சாங், கம்போங் துவாலாங், மெங்காராக், மற்றும் கெர்டாவ் ஆகிய வட்டாரங்களுக்கு அருகில் உள்ளது. 1901-ஆம் ஆண்டு இந்த நகரை பகாங் மாநிலத்தின் தலைநகராக நியமிக்க மாநில அரசாங்கம் முடிவு செய்தது. இருப்பினும் நிலப் பற்றாக் குறையினால், குவாந்தான் நகரம் மாநிலத் தலைநகராகத் தகுதி பெற்றது.
Remove ads
மேற்கோள்கள்
மேலும் காண்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads