ராமேச்சாப் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

ராமேச்சாப் மாவட்டம்map
Remove ads


ராமேச்சாப் மாவட்டம் (Ramechhap District) (நேபாளி: रामेछाप जिल्लाகேட்க), தெற்காசியாவில் உள்ள நேபாள நாட்டில் பாக்மதி மாநிலத்தில் அமைந்த 13 மாவட்டங்களில் ஒன்றாகும். அமைந்துள்ளது. இம்மாவட்டம், நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மந்தலி நகரம் ஆகும்.

Thumb
நேபாளத்தில் ராமேச்சாப் மாவட்டத்தின் அமைவிடம்

ஜனக்பூர் மண்டலத்தில் அமைந்த இம்மாவட்டத்தின் பரப்பளவு 1,546 சதுர கிலோ மீட்டர்கள் ஆகும். 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ராமேச்சாப் மாவட்டத்தின் மக்கள் தொகை 2,02,646 ஆகும். [1] மக்கள் தொகை அடர்த்தி ஒரு சதுர கிலோ மீட்டர் பரப்பில் 137.4 வீதம் உள்ளனர். இம்மாவட்டத்தின் குசுந்தா இன மக்கள் தொகை அழிவின் விளிம்பு நிலையில் உள்ளது.[2] இம்மாவட்டத்தில் நேபாள மொழி, சுனுவார் மொழி, தாமாங் மொழி, நேவாரி மொழி மற்றும் ஹாயு மொழிகள் பேசப்படுகிறது.

Remove ads

புவியியல் மற்றும் தட்ப வெப்பம்

இம்மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 5,000 மீட்டர் உயரத்தில் இமயமலை வரை பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்பம், கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம், மிதவெப்ப வளையம், மிதமான காலநிலை, மான்ட்டேன் #ஆல்ப்ஸ் மலை காலநிலை, துருவப் பகுதி காலநிலை, வெண்பனி படர்ந்த பகுதிகள் என ஐந்து நிலைகளில் காணப்படுகிறது. [3]

கிராம வளர்ச்சி மன்றங்கள்

Thumb
ராமேச்சாப் மாவட்டத்தின் கிராம வளர்ச்சி மன்றங்களைக் காட்டும் வரைபடம்

ராமேச்சாப் மாவட்டம் நாற்பத்தி ஆறு கிராமிய நகராட்சிகளும், மந்தலி மற்றும் ராமேச்சாப் என இரண்டு நகரபுற நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads