வயநாடு மாவட்டம்

கேரளாவின் 14 மாவட்டங்களில் ஒன்று From Wikipedia, the free encyclopedia

வயநாடு மாவட்டம்map
Remove ads

வயநாடு (வயல்நாடு) மாவட்டம் (Wayanad district) இந்தியாவின் தென்பகுதி மாநிலங்களில் ஒன்றான கேரளாவின் வடகிழக்குப் பகுதியில் அமைந்துள்ளது. கோழிக்கோடு, கண்ணூர் ஆகிய மாவட்டங்களிலிருந்து பகுதிகள் பிரித்தெடுக்கப்பட்டு இது 1980-ஆம் ஆண்டு நவம்பர் 12-ஆம் திகதி கேரளாவின் 12-ஆவது மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இப்பகுதி முற்காலத்தில் மாயாசேத்திரம் என அழைக்கப்பட்டதாக பழைய குறிப்புகள் தெரிவிக்கின்றன. இது மருவி வயநாடு ஆனதாகச் சிலர் கூறுகின்றனர். ஆனால், உள்ளூர் மக்கள் நடுவில் நிலவும் கருத்துக்களின்படி வயல்கள் நிறைந்த நாடு என்னும் பொருளிலேயே வயநாடு என்னும் பெயர் ஏற்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இப்பகுதியில் பல பழங்குடியினர் வாழ்ந்துவருகின்றனர். இது மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் 700 தொடக்கம் 2100 மீட்டர்கள் உயரத்தில் அமைந்துள்ளது.[8]

விரைவான உண்மைகள் வயநாடு மாவட்டம் വയനാട് ജില്ല (Malayalam)வயல்நாடு மாவட்டம், நாடு ...
Remove ads

ஆட்சிப் பிரிவுகள்

Thumb
வயநாடு மாவட்டத்தின் வட்டங்கள்

இது மூன்று வட்டங்களைக் கொண்டுள்ளது.[9]

  • மானந்தவாடி வட்டம்
  • சுல்தான் பத்தேரி வட்டம்
  • வைத்திரி வட்டம்

கல்பற்றா, சுல்தான் பத்தேரி, மானந்தவாடி ஆகியவை பெரிய நகரங்களாகும்.

இந்த மாவட்டத்தை மானந்தவாடி, சுல்தான் பத்தேரி, கல்பற்றா ஆகிய சட்டமன்றத் தொகுதிகளாகப் பிரித்திருக்கின்றனர்.[9]

இந்த மாவட்டத்தின் பகுதிகள் வயநாடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டவை.[9]

மேலதிகத் தகவல்கள் சட்டமன்ற தொகுதி எண், சட்டமன்ற தொகுதிகள் ...
Remove ads

அம்பலவயல் மலர் கண்காட்சி

வயநாடு அம்பலவயல் பகுதியில் தோட்டக்கலை துறைக்கு சொந்தமான பண்ணை அமைந்துள்ளது. இங்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் பூப்பொலி என்ற பெயரில் மலர் கண்காட்சி ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இந்த மலர் கண்காட்சிக்காக 12 ஏக்கர் நிலம் தயார்படுத்தப்பட்டு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. 2018-ம் ஆண்டு சனவரி 1 முதல் 18 வரையில் நடைபெறும் மலர் கண்காட்சியில் 1,640 வகை ரோஜாக்கள், 1,200 வகை டேலியா மலர்கள், 15 வகை கிளாடியோஸ் உள்ளிட்ட பல்வேறு பூக்கள் பார்வையாளர்களுக்காக அமைக்கப்பட்டிருந்தது.[10]

Remove ads

சூலை 2024 நிலச்சரிவுகள்

30 சூலை 2024 அன்று இரவில் கொட்டிய கனமழையால் மாவட்டத்தின் முண்டக்கை, சூரமலை, மேப்பாடி மற்றும் அட்டமலை கிராமங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டன. 5 ஆகஸ்டு 2024 வரை 358 பேர் பிணமாக மீட்கப்பட்டனர். 200இற்கும் மேற்பட்டவர்களை காணவில்லை என அறிவிக்கப்பட்டது. நிலச்சரிவிலிருந்து மக்களை மீட்பதற்கு மாநில, தேசியப் பேரிடர் மீட்பு படையினர் களத்தில் இருந்தனர்.[11][12]

சுற்றியுள்ளவை

குறிப்புகள்

மேலும் படிக்க

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads