வேதாத்திரி மகரிசி

உலக அமைதிக்கு வித்திட்டவர் From Wikipedia, the free encyclopedia

வேதாத்திரி மகரிசி
Remove ads

மனவளக்கலையை உருவாக்கி உலகம் அமைதியை முன் வைத்து எளிய மக்கள் மேன்மையடைய பாடுபட்டவர் வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi, ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) மகிழ்ச்சியான வாழ்வுக்கு மனம், உடலை பக்குவப்படுத்தும் விதமாக மனவளக்கலையை உருவாக்கியுள்ளார். பாமர மக்களும் பயன்பெறும் வகையில் அவரது சமுதாயப் பணி அமைந்துள்ளது.[1][2]

விரைவான உண்மைகள் வேதாத்திரி மகரிசி, பிறப்பு ...

அறிவின் சிறப்பை உணர்ந்து இனம், மதம் கடந்த வாழ்வை முன் வைத்தவர். சமுதாயத்தில் தனி மனிதனை உயர்த்தும் தத்துவத்தை உருவாக்கியதால் அருட்தந்தை, பாமர மக்களின் தத்துவ ஞானி என புகழ் பெற்றுள்ளார்.

Remove ads

வாழ்க்கை நிகழ்வுகள்

வேதாத்திரி மகரிஷி சென்னை அருகில் கூடுவாஞ்சேரி கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில்[3] நெசவுத் தொழில் செய்த வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். அதிகம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சொந்த ஊரில் 3ம் வகுப்பு வரை படித்தார். பின்னர் கைத்தறி நெசவில் ஈடுபட்டு குடும்பத்துக்கு உதவினார். கல்வி மீதான ஆர்வத்தால் இரவு பாடசாலையில் சேர்ந்து தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களை கற்றார்.

சென்னை தபால் துறையில் 18ம் வயதில் பணி வாய்ப்பு கிடைத்தது. அந்த பணியுடன் பகுதி நேரமாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். மாணவர்களுக்கு தனியாக கல்விப் பயிற்சியும் அளித்து வந்தார்.

சென்னையில் ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவிடம் சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளை கற்றார். தியானம், யோகா கலைகளில் ஈடுபாடு கொண்டு முறைப்படி கற்றார். வாழ்க்கையில் முழுமையை அறியும் ஆர்வத்தால் உந்தப்பட்டு தேடல்களில் ஈடுபட்டார்.

சுயமுயற்சியால் பலருக்கு வேலை அளிக்கும் வகையில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கினார். அது வெற்றிகரமாக நடந்து வந்தது. அரசின் தொழிற்கொள்கை குளறுபடியால் நெசவு தொழில் சரிவு நிலையை அடைந்தது; உலகப் போரால் தொழிலில் பெரும் பாதிப்ப எற்பட்டது. தன்னிடம் பணிபுரிந்த குடும்பங்களை காப்பாற்ற ஈட்டிய அனைத்தையும் செலவிட்டார். மனதைத் தளரவிடாது கடுமையாக உழைத்துப் படிப்படியாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார்.

அரிசி வியாபாரம் உட்பட தொழில்கள் செய்தார். உடனிருந்தோர் துயரம் தீர்க்கவும் பாடுபட்டார். இரண்டாம் உலகப் போரில் முதலுதவிப் பயிற்சியாளராகவும் பணிபுரிந்தார்.

மனித வாழ்வில் துன்பம் ஏன் என்ற கேள்வி உள்ளத்தில் ஒலித்து கொண்டே இருந்தது. இதற்கு தகுந்த காரணங்களை அறிந்து தெளிய முயற்சியை தொடர்ந்தார். இந்த நிலையில் டிசம்பர் 25, 1944ல் மகான் பரஞ்சோதியை சந்தித்தார். அவரை குருவாக ஏற்று குண்டலினி யோகக்கலையை கற்றார். தியானத்திலும் தீவிர ஈடுபாடு காட்டினார். அருட்பிரகாச வள்ளலார் மீதான ஈர்ப்பால் சிறப்பு அனுபவங்களை பெற்றார். உலகம் அமைதியுடன் வாழ வழிகாணும் சிந்தனைகளை கவிதைகளாக படைத்தார். அவர் எழுதிய, ‘மலரே மலரே நீ யார்...’ எனற கவிதை பெரும் புகழ் பெற்று விளங்குகிறது. இயற்கையிடம் கேள்வி எழுப்பி வாழவின் ரகசியங்களை அறிந்து தெளிந்தார்.

அதன் அடிப்படையில் உடல், மனதை பராமரிக்கும் வகையில் மனவளக்கலை நெறிய உருவாக்கினார். உலக அமைதிக்காக, 'உலக சமாதானம்' World peace என்பதை அடிப்படையாக வைத்து 200 கவிதைகள் எழுதினார். அவற்றை தொகுப்பாக்கி 1957ல் புத்தகமாக வெளியிட்டார். அது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. அதில் உள்ள கருத்துகளை பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே பரப்ப முயற்சி எடுத்தார். இவரது கருத்து சார்ந்து பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி நிலை வரை பட்டப்படிப்புகளுக்கான பாடங்களாக்கப்பட்டு உள்ளன.

Remove ads

மனவளக்கலை

வேதாத்திரி மகரிஷி தமிழகத்தில் அறிவு சார்ந்த செயல்பாட்டை உருவாக்குவதில் முதல் நிலையில் சிந்தித்தவர். திருவள்ளுவர், வள்ளலார் கருத்து வழி நின்று தவம் போன்ற சுய பரிசோதனை முறைகளில் தீவிர கவனம் செலுத்தி செயல்பட்டவர். தன்னை அறிதலே முழு விடுதலை என்ற பார்வையுடன் செயல்பட்டவர். அக செயல்பாட்டை ஆய்வு செய்யும் சுயபரிசோதனையை இலக்கணமாக வகுத்தவர். அதை செயல்படுத்துவதற்கு பாடங்களை தெளிவான படிநிலைகளாக உருவாக்கியுள்ளார்.

உயிரினங்கள் தோற்றம் மற்றும் பரிணாம கொள்கையை வலியுறுத்தும் கருத்துகளை கவிதைகள், உரைகள் வழியாக மக்களுக்கு எடுத்துரைத்தவர். உடலும் மனமும் நலமுடன் செயல்பட எளிய பயிற்சி, சிந்தனை, தவ முறைகளை உள்ளடக்கியது அவர் உருவாக்கிய மனவளக்கலை. நிறைவுடன் வாழ்வதற்கு வழிகாட்ட, ‘ஞானமும் வாழ்வும்’ என்ற தத்துவ நுாலை படைத்துள்ளார். அதை பயன்படுத்துவதற்கு பயிற்சி நடைமுறையையும் வகுத்துள்ளார்.

உலக அமைதி, ஞானி நெறி போன்ற சிந்தனையை வளர்க்கும் விதமாக, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த இனிய தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் உயர்ந்த தத்துவங்களை அவை எடுத்துரைக்கின்றன.

Remove ads

ஞானமும் வாழ்வும்

உயிரினங்களில் உருவ அமைப்பு மற்றும் அறிவுத்திறனில் சிறந்து விளங்குவது மனித இனம். இயற்கையின் இயல்பூக்கத்தால் உருவானது. மனித இனம் ஐம்புலன்களின் வழியில் பெறும் உணர்வுகளால் இயங்குகிறது. இயற்கையின் ரகசியங்களையும், மதிப்பையும் அறிந்து வெளிப்படுத்துகிறது. இதனால் அறிவு மேலும் மேலும் உயர்ந்து செல்கிறது.

மனித இனம் ஒவ்வொரு பிறப்பின் துவக்கத்தையும் புலனுணர்வுகள் வழியாக பெற்ற அறிவால் வாழ வேண்டியுள்ளது. இதனால் உணர்வு மயமாகி கவர்ச்சியில் அமிழ்ந்து, பழக்கங்களில் சிக்கிவிடுகிறது. இதனால் அறிவில் குறுகி துன்பமயத்தில் தவிக்கிறது. சிந்தனையை மேம்படுத்துவதால் இயற்கையை உணர்ந்து தெளிந்து பேராற்றலை பெறலாம். மனிதர்கள் இனிமை கலந்து செயலாற்றும் பண்பால் மாண்புகளை பெறும் தகுதியை பெறும் என்பதை எளிய உதாரணங்கள் வழியாக எடுத்துரைத்துள்ளார். மனித இனம், ஆறாம் அறிவின் உதவியால் ஞானம் பெற்று சேவையாற்ற முடியும் என்பதை நிரூபித்துள்ளார் வேதாத்திரி மகரிஷி.

மக்கள் அமைதியாக வாழும் நோக்கத்துடன், வேதாத்திரி மகரிஷி 1958ல் உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கினார். இதன் வழியாக எளியமுறை உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த பயிற்சி முறைகளை கடைப்பிடித்தால் உடல், மன வளம் பெற்று, அறிவில் தெளிவுற்று மன நிறைவுடன் வாழ முடியும் என்ற குறிக்கோளை இந்த அமைப்பு செயல்படுகிறது. தனி மனிதனிடம் அமைதி நிலவும் பொது, அது விரிந்து குடும்பம், சுற்றம், ஊர், உலகு என பரவும் என்ற சிந்தனையை முன்வைத்து உலக சமுதாய சேவா சங்கம் செயல்பட்டு வருகிறது.

இங்கு தவ முறைகள், தத்துவ விளக்கங்கள் அவ்வப்போது நடத்தப்படுகின்றன. அகத்தாய்வு, பிரம்மஞானம், அருள்நிதியர் என முறைப்படுத்தி கற்றுத் தரப்படுகிறது. இதற்காக 'உலக சமாதானம்' என்ற நூலை 1957ல் வெளியிட்டார் மகரிஷி. தொடர்ந்து பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் வாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகளை சொற்பொழிவாக நிகழ்த்தினார். உலகம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த கருத்துகளை செயல்வடிவாக உலகமெங்கும் பரப்ப உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பை நிறுவினார். இந்த அமைப்புக்க இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட நாடுகளில் கிளைகளை கொண்டுள்ளது. பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுடன் இயங்கி வருகின்றன. வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வதற்காக அகத்தாய்வு என்ற சுயபரிசோதனை முறையில் தன்னை அறியும் பயிற்சி முறையை உருவாக்கியுள்ளார் தத்துவ ஞானி. எண்ணம் ஆராய்தல், ஆசையை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுதல், பெண்ணின் பெருமை போன்றவற்றை செயல்படுத்தும் நடைமுறைகள் பாடமாக அமைந்துள்ளன.

Remove ads

அறிவு திருக்கோவில்

தமிழ்நாடு மாநிலம், கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு என்ற இடத்தில் அமைந்துள்ளது அறிவுத்திருக்கோவில். இங்கு வேதாத்திரி மகரிசி வாழ்வை நிறைவு செய்து புகழுடன் வாழும் மணிமண்டபம் அமநை்துள்ளது. பயன்படுத்திய பொருட்களை பராமரிக்கும் அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. உண்டு உறைவிட பயிற்சிக்கு உரிய கூடங்கள் அமைந்துள்ளன. அவை ஓம்கார மண்டபம், ஆனந்த திருநிலையம், அன்புத்திருநிலையம் என பல பெயர்களுடன் அழைக்கப்படுகின்றன.

அறிவுத்திருக்கோவில் வளாகத்தில் அறிவரங்கம் என்ற பெயரில் 2465 சதுர மீட்டர் பரப்புள்ள பிரமாண்டமான வாசகசாலையும் இயங்கி வருகிறது. இங்கு வேதாத்திரி மகரிஷி எழுதிய புத்தகங்களுடன், ஆய்வு தொடர்பான நுால்களும் ஏராளமாக உள்ளன. மரங்கள் அடர்ந்த சூழலில் அமைந்துள்ளதால் அமர்ந்து வாசிக்க ஏற்றதாக உள்ளது. ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா பகுதியாகவும் உள்ளது. இது உலக சமுதாய சேவா சங்கம் அமைப்பால் (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.

அறிவுத் திருக்கோவில் வளாகத்தில் வேதாத்திரிய கல்வி நிறுவனம் சார்பில் இனிய வாழ்வுக்கான யோகக்கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. குண்டலினி யோகம், எளியமுறை உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சியும் தரப்படுகின்றன. வேதாத்திரி மகரிஷி பயன்படுத்திய மகிழுந்துடன் கூடிய அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. வேதாத்தரி எழுதிய புத்தகங்கள் விற்பனை கூடமும் அமைந்துள்ளது.

அறிவுத்திருக்கோவில் அமைந்துள்ள பகுதி அருட்பெருஞ்ஜோதி நகர் என அழைக்கப்படுகிறது.

உயரினங்களிடம் அன்பு, கருணையுடன் நிறைவாக வாழ்ந்து வழிகாட்டிய வேதாத்திரி மகரிஷி மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமை அன்று, 95ம் வயதில் உலக வாழ்வை அறிவுத் திருக்கோவில் வளாகத்தில் நிறைவு செய்தார். அவரது நினைவாக மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு உரிய காலமுறைப்படி தியானம் என்ற தவ நிகழ்வுகள் அது சார்ந்த பயிற்சிகள் நடந்து வருகின்றன.

Remove ads

படைப்புகள்

ஒவ்வொரு மனிதன் மனதில் அமைதியும் சிந்தனையில் தெளிவும் ஏற்படுத்துவதற்காக வேதாத்திரி மகரிஷி எளிய பாடல்களையும் இனி பொன்மொழிகளையும் வழங்கியுள்ளார். அவற்றில் ஒன்று, வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்ற பொன்மொழி. அது உலகில் எப்பகுதியிலும் அவரது பொன்மொழி ஜொலித்துக்கொண்டிருக்கிறது. வேதாத்திரி நிறுவிய, அன்பொளி என்ற மாத இதழ் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் ஈரோடு மனவளக்கலை மன்றத்தில் இருந்து வெளியிடப்படுகிறது.

வேதாத்திரி மகரிஷி 80 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில:

  1. வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம்
  2. வாழ்வியல் விழுமியங்கள்
  3. பிரம்மஞான சாரம்
  4. நான் யார் ?
  5. ஞானக்களஞ்சியம்

கவிதைகள் பலவும் புனைந்துள்ளார். அவர் எழுதிய ஞானமும் வாழ்வும் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள, ‘எல்லாம் வல்ல தெய்வமது எங்கும் உள்ளது நீக்கமற சொல்லால் மட்டும் நம்பாதே சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய் வல்லாய் உடலில் இயக்கமவன் வாழ்வில் உயிரில் அறிவுமவன்... கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்காணும் இன்ப துன்பமவன்... அவனின் இயக்கம் அணுவாற்றல் அணுவின் கூட்டுப் பக்குவம் நீ அவனில் தான் நீ உன்னில் அவன் அவன் யார்? நீயார்? பிரிவேது? அவனை மறந்தால் நீ சிறியோன் அவனை அறிந்தால் நீ பெரியோன் அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி...’ என்ற பாடல் அறிவே கடவுள் என்ற தத்துவத்தை முன்வைக்கிறது. மனவளக்கலை நிகழ்வுகளில் இறைவணக்கமாக பாடப்படுகிறது.

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads