வேதாத்திரி மகரிசி

உலக அமைதிக்கு வித்திட்டவர் From Wikipedia, the free encyclopedia

வேதாத்திரி மகரிசி
Remove ads

மனவளக்கலையை உருவாக்கி உலக அமைதிக்கு பாடுபட்ட அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி (Vethathiri Maharishi, ஆகஸ்ட் 14, 1911 - மார்ச் 28 2006) சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் பிறந்தார். அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்த வாழ்வுக்கு வழி காட்டிய மகான்கள் திருமூலர், திருவள்ளுவர், தாயுமானவர், இராமலிங்க அடிகளார் மரபு நெறியை அகங்கொண்டு சமுதாயப் பணி ஆற்றி வந்தார்.[1][2]

விரைவான உண்மைகள் வேதாத்திரி மகரிசி, பிறப்பு ...

உலகம் அமைதியாக வாழும் நெறிகளை உருவாக்கினார். உலகநாடுகள் போர்ச்சூழலை தவிர்த்து இயங்கும் மேன்மையான வழிமுறைகள் அடங்கிய திட்டத்தை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பித்தார். அமைதியும் செழிப்பும் நிறைந்த வாழ்வுக்கு உகந்த எளிய தத்துவத்தை எளிமையாக உருவாக்கி உலகம் எங்கும் பரப்பினார். பாமரர் வாழ்வை உயர வைக்கும் அருட்தந்தை, தத்துவ ஞானி என்ற புகழுடன் மேன்மை பெற்றுள்ளார்.

Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி சென்னை அருகில் கூடுவாஞ்சேரி கிராமத்தில் செங்குந்த கைக்கோளர் மரபில்[3] நெசவுத் தொழில் செய்த வரதப்ப முதலியார், முருகம்மாள் (சின்னம்மாள்) தம்பதியருக்கு எட்டாவது குழந்தையாகப் பிறந்தார். சிறுவயதில் தாயிடம் பக்தி, புராணக் கதைகளை கேட்டு அறிந்து கொண்டார்.

குடும்பச்சூழலால் இவருக்கு அதிகம் படிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை. சொந்த ஊரில் மூன்றாம் வகுப்பு வரை படித்தார். பின்னர் குடும்பத் தொழிலான கைத்தறி நெசவில் ஈடுபட்டு பெற்றோருக்கு உதவினார். கல்வி மீதான ஆர்வத்தால் இரவு பாடசாலையில் சேர்ந்து தமிழ், ஆங்கிலம், கணித பாடங்களை ஆர்வமுடன் கற்றார்.

சென்னை தபால் துறையில் 18ம் வயதில் பணி வாய்ப்பு கிடைத்தது. அந்த பணியுடன் பகுதி நேரமாக நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வந்தார். பற்பொடி தயாரித்து விற்பதிலும் ஈடுபட்டார். மாணவர்களுக்கு தனியாக கல்விப் பயிற்சியும் அளித்து வந்தார்.

ஆயுர்வேத மருத்துவர் எஸ். கிருஷ்ணாராவ் என்பவர் நட்பு கிடைத்தது. அவரிடம் சித்த, ஆயுர்வேத மற்றும் ஹோமியோபதி மருத்துவ முறைகளைக் கற்றார். தியானம், யோகா கலைகளையும் முறைப்படி கற்றார். வாழ்வு பற்றிய தேடல் எழுந்தது/ வாழ்க்கையின் முழுமையை அறியும் நோக்கத்தால் உந்தப்பட்டார்.

இந்த நிலையில் 22ம் வயதில் தந்தை மறைந்தார். தொடர்ந்து, சொந்த ஊரான கூடுவாஞ்சேரிக்கு திரும்பி வந்தார். அங்கு தன் சகோதரி மகள் லோகாம்பாள் என்பவரை, 23ம் வயதில் மணந்தார். பின் சுயமுயற்சியால் பலருக்கு வேலை அளிக்கும் வகையில் நெசவுத் தொழிற்சாலை ஒன்றை உருவாக்கினார்.

இரண்டாம் உலகப் போரின் போது முதலுதவிப் பயிற்சியாளராக பணிபுரிந்தார். அரசின் தொழிற்கொள்கை குளறுபடியால் நெசவு தொழில் சரிவு நிலையை அடைந்தது; இருப்பினும் தன்னிடம் பணிபுரிந்த 2000 குடும்பங்களையும் காப்பாற்றும் வகையில் ஈட்டிய அனைத்தையும் செலவிட்டார். மனதைத் தளரவிடாது மீண்டும் கடுமையாக உழைத்துப் படிப்படியாகப் பொருளாதாரத்தை மேம்படுத்தினார். அரிசி வியாபாரம் உட்பட தொழில்கள் செய்தார். உடனிருந்தோர் துயரம் தீர்க்கவும் பாடுபட்டார்.

மனித வாழ்க்கையில் துன்பம் ஏன் என்ற கேள்வி அவரது உள்ளத்தில் ஒலித்து கொண்டே இருந்தது. இதற்கு தகுந்த காரணங்களை அறிந்து தெளியும் முயற்சியை தொடர்ந்தார். தெளிவு பெறுவதற்காக தேடல்களை தொடர்ந்தார்.

இந்த நிலையில் டிசம்பர் 25, 1944ல் மகான் பரஞ்சோதியை சந்தித்தார். அவரை குருவாக ஏற்று குண்டலினி யோகக்கலையை கற்றார். தியானத்திலும் ஈடுபட்டார். அதன் விளைவாக, 35ம் வயதில் இறையாற்றலை உணர்ந்தார். அருட்பிரகாச வள்ளலார் மீதான ஈர்ப்பால் சிறப்பு அனுபவங்களை பெற்றார். தொடர்ந்து உலகம் அமைதியுடன் வாழும் வழிகள் உடைய ஆக்கங்களை கவிதைகளாக படைத்தார். மென்மையாக, ‘மலரே மலரே நீ யார்...’ என கேள்வி எழுப்பி பிரபஞ்ச ரகசியங்களை அறிந்து தெளிந்தார்.

அதன் அடிப்படையில் மனவளக்கலை நெறிய உருவாக்கினார். அவரது 46ம் வயதில் உலக அமைதிக்காக, 'உலக சமாதானம்' World peace என்பதை அடிப்படையாக வைத்து 200 கவிதைகள் எழுதினார். அதை 1957ல் புத்தகமாக வெளியிட்டார். அது தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் பதிப்பிக்கப்பட்டது. அதில் உள்ள கருத்துகளை பாடத்திட்டத்தின் வழியாக பள்ளி, கல்லூரிகளில் பரப்ப முயற்சி எடுத்தார். இந்த கருத்து சார்ந்த பாடத்திட்டங்கள் பல்கலைக்கழகங்களில் இளநிலை, முதுநிலை, ஆராய்ச்சி நிலை வரை பட்டப்படிப்புகளாக உள்ளன.

Remove ads

மனவளக்கலை

இல்லறத்திலும், நெசவுத் தொழிலிலும் ஈடுபாடு கொண்டிருந்த வேதாத்திரி மகரிஷி தமிழகத்தில் அறிவு சார்ந்த செயல்பாட்டை உள்ளடக்கிய சித்தர்களின் நூல்களைக் கற்று கருத்துகளை உள்வாங்கினார். அவற்றில் உரிய மாற்றங்கள் செய்து தியானம் போன்ற சுய பரிசோதனை முறைகளில் தீவிர கவனம் செலுத்தினார். தன்னை அறிதலே விடுதலை என்ற மெய்யுணர்வு பார்வையுடன் செயல்பட்டார். விடா முயற்சியுடன் அகத்தை ஆய்வு செய்யும் சுயபரிசோதனை முறையை இலக்கணமாக வகுத்தார். அது தொடர்பான செயல்முறைகளையும் உருவாக்கினார்.

உன்னதமான கருத்துகளை கவிதைப் படைப்பு, உரைகள் வழியாக பாமர மக்களுக்கு எடுத்துரைத்தார். உடலும் மனமும் நலமுடன் செயல்பட்டால் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ முடியும் என்பதை நிரூபித்தார். இதற்காக எளிய உடற்பயிற்சி முறைகள், எளிய குண்டலினி யோகா முறைகளை உள்ளடக்கிய மனவளக்கலையை உருவாக்கினார். நிறைவுடன் வாழ்வதற்கு வழிகாட்டும், ‘ஞானமும் வாழ்வும்’ என்ற எளிய தத்துவ நுாலை படைத்தார். அதை பயன்படுத்தி பயிற்சிகள் தந்து மக்களை வழிநடத்தினார்.

உலக அமைதி, ஞானி நெறி போன்ற சிந்தனையை வளர்க்கும் விதமாக, விஞ்ஞானமும் மெய்ஞ்ஞானமும் கலந்த இனிய தமிழ்ப்பாடல்களை இயற்றியிருக்கிறார். பாமர மக்களும் புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாக அவை உள்ளன. உயர்ந்த தத்துவங்களை எடுத்துரைக்கின்றன. மதங்களின் சாரம் எல்லாம் ஒன்றே என்பதை வலியுறுத்தியுள்ளார் மகரிஷி.

மெளனம்

Remove ads

ஞானமும் வாழ்வும்

உயிரினங்களில் உருவ அமைப்பு மற்றும் அறிவுத்திறனில் சிறுந்து விளங்குவது மனித இனம். இயற்கையின் இயல்பூக்கத்தால் உருவானது. மனித இனம் ஐம்புலன்களின் வழியில் பெறும் உணர்வுகளால் இயங்குகிறது. இயற்கையின் ரகசியங்களையும், மதிப்பையும் அறிந்து வெளிப்படுத்துகிறது. இதனால் அறிவு மேலும் மேலும் உயர்ந்து செல்கிறது. மனித இனம் ஒவ்வொரு பிறப்பின் துவக்கத்தையும் புலனுணர்வுகள் வழியாக பெற்ற அறிவால் வாழ வேண்டியுள்ளது. இதனால் உணர்வு மயமாகி கவர்ச்சியல் அமிழ்ந்து, பழக்கங்களில் சிக்கி, அறிவில் குறுகி விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் துன்பமயத்தில் தவிக்கிறது. இயற்கையின் முழுமையுடன் ஒப்பிட்டால் மனித இனம் மிகவும் சிறியது. ஆனால் சிந்தனை சார்ந்த அறிவால் இயற்கையை முயுமையாக உணர்ந்து தெளிந்து பேராற்றலாகும் நிலையை அடைகிறது. இனிமை கலந்து செயலாற்றும் பண்பால் மாண்புகளை பெறும் தகுதியை அடைந்துள்ள மனித இனம், ஆறாம் அறிவின் உதவியால் ஞானம் பெற்று சமுதாயத்துக்கு அறிவொளியாக விளக்கி சேவையாற்ற முடியும் என்பதை வாழ்ந்து நிரூபித்துள்ளார் அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி.


உலக அமைதி

உலக மக்கள் அமைதியாக வாழும் நோக்கத்துடன், தத்துவஞானி வேதாத்திரி மகரிஷி 1958ல் உலக சேவா சமுதாய சங்கத்தை உருவாக்கினார். இதன் வழியாக எளியமுறை உடற்பயிற்சி, தியானப் பயிற்சி, காயகல்பப் பயிற்சி மற்றும் அகத்தாய்வுப் பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இந்த பயிற்சி முறைகளை வாழ்வில் கடைப்பிடித்தால் உடல் நலமும் மனவளமும் பெற்று, அறிவிலே தெளிவுற்று மன நிறைவுடன் வாழ முடியும் என்ற குறிக்கோளை எட்டுகிறது. தனி மனிதனிடம் அமைதி நிலவும் பொது, அது விரிந்து குடும்பம், சுற்றம், ஊர், உலகு என பரவும் என்ற நோக்கில் உலக சமுதாய சேவா சங்கம் செயல்பட்டு வருகிறது. இவை தவிர சிறப்புத் தவமுறைகளும், தத்துவ விளக்கங்களும் அவ்வப்போது நடத்தப்பெறும் அகத்தாய்வு பயிற்சி வகுப்புகளிலும் பிரம்மஞானப் பயிற்சியிலும் கற்றுத் தரப்படுகின்றன. தத்துவஞானி வேதாத்திரி, 'உலக சமாதானம்' என்ற நூலை 1957ல் வெளியிட்டார் மகரிஷி. தொடர்ந்து பல நாடுகளுக்கு செல்லும் வாய்ப்பு கிடைத்தது. அங்கெல்லாம் வாழ்வை மேம்படுத்தும் சிந்தனைகளை சொற்பொழிவாக நிகழ்த்தினார். உலகம் அமைதியாக வாழ ஏற்ற கருத்துகளை எடுத்துரைத்தார். இந்த கருத்துகளை செயல்வடிவாக உருவாக்கி அதை உலகமெங்கும் பரப்ப உலக சமுதாய சேவா சங்கம் என்ற அமைப்பை துவங்கினார். இந்த அமைப்புக்க இந்தியா, சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான், தென்கொரியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகளிலும் கிளைகள் உள்ளன. பயிற்சி பெற்ற தன்னார்வலர்களுடன் இயங்கி வருகின்றன. வாழ்வின் நோக்கத்தை அறிந்து கொள்வதற்காக அகத்தாய்வு என்ற சுயபரிசோதனை முறையில் தன்னை அறியும் பயிற்சி முறையை உருவாக்கியுள்ளார் தத்துவ ஞானி. எண்ணம் ஆராய்தல், ஆசையை சீரமைத்தல், சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், குடும்பத்தில் அமைதியை நிலைநாட்டுதல், பெண்ணின் பெருமை போன்றவற்றை சிந்தனையுடன் அறிந்து செயல்படுத்தும் நடைமுறை பாடமாக அமைந்துள்ளன.

Remove ads

அறிவுத்திருக்கோவில்

தமிழ்நாடு மாநிலத்தில் கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியாறு என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு வேதாத்திரி மகரிசி வாழ்வை நிறைவு செய்து புகழுடன் வாழும் மணிமண்டபம் அமநை்துள்ளது. அவர் பயன்படுத்திய பொருட்கள் உடைய அருங்காட்சியகம் ஒன்றும் உள்ளது. உண்டு உறைவிட பயிற்சிக்கு உரிய கூடங்கள் அமைந்துள்ளன. இந்த பகுதி ஆழியாறு அணை அருகே உள்ளதால், சுற்றுலா பகுதியாகவும் உள்ளது. இந்த இடம் உலக சமுதாய சேவா சங்கம் அமைப்பால் (WCSC) நிர்வாகிக்கப்படுகிறது.

அறிவுத் திருக்கோவில் வளாகத்தில் வேதாத்திரிய கல்வி நிறுவனத்தால் இனிய வாழ்வுக்கான யோகக்கல்வி மற்றும் பயிற்சி வழங்கப்படுகிறது. குண்டலினி யோகம், எளியமுறை உடற்பயிற்சிகள், மூச்சுப் பயிற்சி மற்றும் காயகல்ப பயிற்சி கற்றுக் கொடுக்கப்படுகின்றன

அருட் தந்தை பயன்படுத்திய மகிழுந்து, எழுதிய புத்தகங்கள் விற்பனை கூடம் இங்கு அமைந்துள்ளன. அருட்தந்தையின் நினைவு மண்டபத்தில் காலமுறைப்படி தியான நிகழ்வுகள் நடந்து வருகின்றன. இந்த பகுதி அருட்பெருஞ்ஜோதி நகர் என அழைக்கப்படுகிறது. அருட்தந்தை வேதாத்திரி நிறுவிய, அன்பொளி என்ற அறிவு ஒளி மாத இதழ் தமிழ், ஆங்கிலம் மொழிகளில் இங்கிருந்து வெளிவருகிறது.

உயரினங்களிடம் அன்பு, கருணையுடன் நிறைவாக வாழ்ந்து வழிகாட்டிய அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி மார்ச் 28, 2006 செவ்வாய்க்கிழமை அன்று, 95ம் வயதில் உலக வாழ்வை அறிவுத் திருக்கோவில் வளாகத்தில் நிறைவு செய்தார். அவரது நினைவாக மணிமண்டபம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Remove ads

பணிகள்

வைர வரிகள்

மனம் அமைதியும் சிந்தனையில் தெளிவும் ஏற்படுத்துவதற்காக அருட்தந்தை வேதாத்திரி மகரிஷி எளிய மந்திரத்தை வழங்கியுள்ளார். உலகில் எப்பகுதியிலும் இந்த வைர வரி ஜொலித்துக்கொண்டிருக்கிறது. அந்த வைர வரிகள்...


"வாழ்க வையகம்"

"வாழ்க வளமுடன்"

படைப்புகள்

வேதாத்திரி மகரிஷி 80 நூல்களை எழுதியுள்ளார். அவற்றில் சில:

  1. வேதாத்திரியத்தின் இறைநிலை விளக்கம்
  2. வாழ்வியல் விழுமியங்கள்
  3. பிரம்மஞான சாரம்
  4. நான் யார் ?
  5. ஞானக்களஞ்சியம்

கவிதைகள் பலவும் புனைந்துள்ளார் அருட்தந்தை. அவையும் நுால் தொகுப்பு ஆக்கப்பட்டுள்ளன. அதில் ஞானமும் வாழ்வும் என்ற தொகுப்பில் இடம்பெற்றுள்ள புகழ் பெற்ற இணை வணக்க பாடல் இது...

எல்லாம் வல்ல தெய்வமது
எங்கும் உள்ளது நீக்கமற
சொல்லால் மட்டும் நம்பாதே
சுயமாய்ச் சிந்தித்தே தெளிவாய்
வல்லாய் உடலில் இயக்கமவன்
வாழ்வில் உயிரில் அறிவுமவன்.
கல்லார் கற்றார் செயல் விளைவாய்க்
காணும் இன்ப துன்பமவன்.
அவனின் இயக்கம் அணுவாற்றல்
அணுவின் கூட்டுப் பக்குவம் நீ
அவனில் தான் நீ உன்னில் அவன்
அவன் யார்? நீயார்? பிரிவேது?
அவனை மறந்தால் நீ சிறியோன்
அவனை அறிந்தால் நீ பெரியோன்
அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம்
அறிவு முழுமை அது முக்தி.
Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads