ஆனந்தி (திரைப்படம்)

பி. நீலகண்டன் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

ஆனந்தி (திரைப்படம்)
Remove ads

ஆனந்தி (Anandhi) 1965 ஆம் ஆண்டு திசம்பர் மாதம் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பி. நீலகண்டன் இயக்கிய இத்திரைப்படத்தின் கதை மற்றும் வசனத்தை எம். எஸ். சோலைமுத்து எழுதியிருந்தார்.[2] இப்படத்திற்கு எம். எஸ். விசுவநாதன் இசையமைத்திருந்தார். இத்திரைப்படத்தில் எஸ். எஸ். ராஜேந்திரன், சி. ஆர். விஜயகுமாரி, எம். ஆர். ராதா ஆகியோர் முக்கிய வேடங்களிலும், எம். என். நம்பியார், நாகேஷ், மனோரமா, எஸ். வி. சகஸ்ரநாமம், வி. கே. ராமசாமி ஆகியோர் இதர துணை வேடங்களிலும் நடித்திருந்தனர்.[3][4]

விரைவான உண்மைகள் ஆனந்தி, இயக்கம் ...
Remove ads

கதை

மகிழ்ச்சியாக வாழ்ந்துவரும் சோமு தீயவன் நித்தியானந்தம் செய்யும் திருட்டுவேலைகளில் எதிர்பாராதவிதமாக மாட்டிக் கொள்கிறான். நித்தியானந்தத்தின் மகளான ஆனந்தி இந்த சூழ்ச்சிகளை அறிந்து கொள்கிறாள். அதன் பிறகு சோமுவுக்கு ஆதரவாக செயல்படுகிறாள். இதன் வழியாக இருவருக்கும் காதல் பிறக்கிறது. நிரபராதியான சோமு வழக்கிலிருந்து தப்பித்தானா, சோமுவும், ஆனந்தியும் தங்கள் காதலில் வென்றார்களா என்பதே கதையின் முடிவாகும்.

நடிகர்கள்

பாடல்கள்

விரைவான உண்மைகள் ஆனந்தி, ஒலிப்பதிவு எம். எசு. விசுவநாதன் ...

எம். எஸ். விசுவநாதன் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் கண்ணதாசன் எழுதியிருந்தார்.[5]

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads