இராமநாதபுரம் தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இராமநாதபுரம் தொடருந்து நிலையம் (Ramanathapuram railway station, நிலையக் குறியீடு:RMD) இந்தியாவின், தமிழ்நாட்டின், இராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக இரயில்வே மண்டலத்தின், மதுரை கோட்டத்தின் கீழ் செயல்படுகிறது. மேலும் இந்த நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைக்கிறது.[1]
Remove ads
இருப்பிடம்
இந்த தொடருந்து நிலையமானது இராமநாதபுரத்தில் ரயில்வே சாலையில், MSK நகர் மற்றும் பசும்பொன் நகரில் அமைந்துள்ளது. இங்கிருந்து 120 கிலோமீட்டர் (75 மைல்) தொலைவில் அமைந்துள்ள மதுரை பன்னாட்டு வானூர்தி நிலையம் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ஆகும்..
வழித்தடம்
இந்த நிலையம் சென்னையை, வாரணாசி, புவனேஸ்வர், மதுரை, மானாமதுரை, மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருச்சிராப்பள்ளி, கோயம்புத்தூர், இராமேசுவரம் போன்ற இடங்களுடன் இணைக்கும் முக்கிய பாதையின் மைய புள்ளியாகும்.
- மானாமதுரை முதல் இராமேசுவரம் வரை ஒற்றை அகலபாதை.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தமிழ்நாட்டிலுள்ள 532 தொடருந்து நிலையங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 77 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டிற்கென 4100கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது. [2][3][4][5][6]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் மதுரை தொடருந்து கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, இராமநாதபுரம் தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. [7][8][9][10][11][12][13][14]
மேற்கோள்கள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads