இலலிதாதித்ய முக்தாபிதன்

காஷ்மீரின் மன்னன் From Wikipedia, the free encyclopedia

இலலிதாதித்ய முக்தாபிதன்
Remove ads

முக்தாபிதன் என்கிற இலலிதாதித்யன் (Lalitaditya alias Muktapida; ஆட்சிக்காலம் பொ.ஊ. 724–760) இந்திய துணைக் கண்டத்தில் உள்ள காஷ்மீர் பகுதியை ஆண்ட கார்கோட வம்சத்தின் சக்திவாய்ந்த ஆட்சியாளர் ஆவார். இலலிதாதித்தன் தன்னை புராண நாக மன்னன் கார்கோடகனின் வழித்தோன்றல் என்று கூறிக்கொண்டார்.[1]

விரைவான உண்மைகள் இலலிதாதித்ய முக்தாபிதன், காஷ்மீரின் மகாராஜா ...
Thumb
பரிகாசபுரத்தின் இடிபாடுகள்
Remove ads

வரலாறு

பொ.ஊ. 12 ஆம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் கல்கணர் இலலிதாதித்யனை ஒரு உலக வெற்றியாளராகக் குறிப்பிடுகிறார். அவரது இராஜதரங்கிணியில் இவருக்கு அற்புதமான சக்திகள் இருந்ததால் விரிவான வெற்றிகள் ஏற்பட்டதாகக் குறிப்பிடுகிறார். கல்கணரின் கூற்றுப்படி, இலலிதாதித்யன் மத்திய இந்திய மன்னர் யசோவர்மனை தோற்கடித்தார். பின்னர் இந்தியாவின் கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளுக்கு அணிவகுத்துச் சென்றார். இவர் காஷ்மீருக்குத் திரும்பும் வழியில் மேலும் பல ஆட்சியாளர்களை அடிபணியச் செய்தார். பின்னர் பல வடகணரின் கணக்கின் மறுகட்டமைப்பின் அடிப்படையில், கலை வரலாற்றாசிரியர் ஹெர்மன் கோட்ஸ் (1969) இந்தியாவின் முக்கிய பகுதிகள் மற்றும் இன்றைய ஆப்கானித்தான் மற்றும் நடு ஆசியாவை உள்ளடக்கிய ஒரு குறுகிய கால சாம்ராஜ்யத்தை இலலிதாதித்யன் உருவாக்க முடிந்தது என்று கருதுகிறார். காஷ்மீரின் வரலாற்றை எழுதும் அடுத்தடுத்த எழுத்தாளர்களால் கோட்ஸின் பகுப்பாய்வு ஏற்றுக்கொள்ளப்பட்டு பரவலாக மேற்கோள் காட்டப்பட்டது. இருப்பினும், கல்கணரின் கணக்கு இலலிதாதித்யனின் அண்டை ஆட்சியாளர்களின் பதிவுகளால் ஆதரிக்கப்படவில்லை. உதாரணமாக, தாங் வம்சத்தின் நாளேடுகள் இவரை தாங் பேரரசரின் அடிமையாகக் காட்டுகின்றன. இதன் விளைவாக, பல அறிஞர்கள் கல்கணரின் கணக்கை புராண மிகைப்படுத்தல் என்று நிராகரித்துள்ளனர்.

இவ்வாறான மிகைப்படுத்தல்கள் இருந்தபோதிலும், இலலிதாதித்தன் பொதுவாக தனது வம்சத்தின் மிகவும் சக்திவாய்ந்த அரசராக ஏற்றுக்கொள்ளப்படுகிறார். இவர் காஷ்மீரில் இப்போது சிதிலமடைந்துள்ள மார்தாண்ட சூரியன் கோயில் உட்பட பல ஆலயங்களை நிறுவினார். இவர் பல நகரங்களையும் நிறுவினார். பரிகாசபுரத்தில் ஒரு புதிய தலைநகரம் உட்பட, இவர் ஸ்ரீநகரையும் பராமரித்து வந்தார்.

Remove ads

ஆட்சிக் காலம்

இலலிதாதித்தனின் ஆட்சி 36 ஆண்டுகள், 7 மாதங்கள், 11 நாட்கள் நீடித்ததாக கல்கணர் குறிப்பிடுகிறார்.[2] பொ.ஊ. 700-736 காலத்தில் இலலிதாதித்தன் ஆட்சி செய்ததாக அவர் கூறுகிறார்.[3] இருப்பினும், இது சரியல்ல, ஏனெனில் இவரது முன்னோடி பொ.ஊ. 720 இல் தாங் தலைநகர் சாங்கானுக்கு தூதரகத்தை அனுப்பியதாக அறியப்படுகிறது.[4] தாங் பதிவுகளில் "தியான்மு" என்று குறிப்பிடப்பட்ட இந்த முன்னோடி, ஒருவேளை தாராபிதனாக இருக்கலாம், இருப்பினும் சில அறிஞர்கள் அவரை சந்திரபிதன் என்று அடையாளம் காட்டியுள்ளனர்.[5] நவீன வரலாற்றாசிரியர்கள் இலலிதாதித்தனின் ஆட்சிக்காலம் பொ.ஊ. 724/5 - சு. 760 என தோராயமாக கணித்துள்ளனர்.[6]

Remove ads

சூரியக் கோவில்

இலலிதாபுரத்தில், இலலிதாதித்யன் சூரியக் கடவுளுக்கு) சன்னதியைக் கட்டியதாகவும், கன்னோசியின் நிலத்தையும் அதன் கிராமங்களையும் இந்தக் கோயிலுக்கு வழங்கியதாகவும் கல்கணர் குறிப்பிடுகிறார்.[7] கூடுதலாக, இவர் மார்தாண்ட சூரியன் கோயிலையும் அதைச் சுற்றியுள்ள நகரங்களையும் உருவாக்கினார்.[8]

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads