நிதி அமைச்சகம் (இந்தியா)
அரசு துறைகள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நிதி அமைச்சகம் (Ministry of Finance) என்பது நாட்டின் நிதி விவகாரங்களைக் கவனிக்கும் இந்திய அரசின் அமைச்சகங்களுள் ஒன்றாகும். இது இந்தியாவின் முக்கிய அமைச்சகங்களுள் ஒன்று. இதன் தலைவர் நிதியமைச்சர் எனப்படுவார். இந்த அமைச்சகத்தின் பணியானது, வரி, நிதித் துறை சார்ந்த சட்டங்கள், பங்கு சந்தை, வருடாந்திர வரவு-செலவு திட்ட மதிப்பீடு, தேசிய மற்றும் மாநில அரசு நிதி மற்றும் நிதி நிறுவனங்களை கட்டுப்படுத்துவதாகும். இந்த அமைச்சகத்தின் கீழ் செயல்படும் வருவாய்த் துறையின் நேரடிக் கட்டுப்பாட்டில் மத்திய நேரடி வரிகள் வாரியம் மற்றும் மத்திய மறைமுக வரிகள் மற்றும் சுங்க வாரியம் செயல்படுகிறது. மேலும் நிதி சார்ந்த புலனாய்வு, விசாரணை, சட்ட அமலாக்கம் செய்வதற்கு வருமான வரி விசாரணை தலைமை இயக்குநரகம், மத்திய பொருளாதார புலனாய்வு பணியகம் மற்றும் அமலாக்க இயக்குநரகம் செயல்படுகிறது. மேலும் வரிகள் தொடர்பான பிணக்குகளை தீர்வுக்கு மேல்முறையீட்டு தீர்ப்பாயங்கள் செயல்படுகிறது.
நிதியமைச்சகத்தின் நிர்வாகத்தின் கீழ் குடியியல் பணிகளின் உட்பிரிவுகளான (இந்திய ஆட்சிப் பணி, இந்திய வருவாய்ப் பணி (Indian Revenue Service), இந்திய பொருளாதாரப் பணி (Indian Economic Service , இந்திய செலவு கணக்குகள் சேவை (Indian Cost Accounts Service) மற்றும் இந்தியன் சிவில் கணக்குகள் பணி (Indian Civil Accounts Service) உட்பட) வருகின்றது.
Remove ads
வரலாறு
[1] விடுதலைப் பெற்ற இந்தியாவின் முதல் நிதியமைச்சர் ஆர். கே. சண்முகம் செட்டியார் ஆவார். இவர் 1947 நவம்பர் 26 அன்று விடுதலை இந்தியாவின் முதல் நிதி நிலை அறிக்கையை சமர்பித்தார்.
நிர்வாக அமைப்பு
நிதி அமைச்சகம் ஐந்து பிரிவுகளை கொண்டது.
- வருவாய்த் துறை
- பொருளாதார விவகாரங்கள் துறை (Department of Economic Affairs)
- செலவு துறை (Department of Expenditure)
- நிதி சேவைகள் துறை (Department of Financial Services)
- பங்கு விற்பனைத் துறை (Department of Disinvestment)
வரிகள் தொடர்பான அமைப்புகள்
சட்ட அமலாக்க அமைப்புகள்
நிதி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் சட்ட அமலாக்க அமைப்புகள் பின்வருமாறு:
மேலும் பார்க்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads