பரமன்குறிச்சி, தூத்துக்குடி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பரமன்குறிச்சி என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள உடன்குடி ஊராட்சி ஒன்றியத்தின் பரமன்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 36.47 மீ. உயரத்தில், (8.4840°N 78.0457°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு பரமன்குறிச்சி அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், பரமன்குறிச்சி ஊரின் மொத்த மக்கள்தொகை 9,181 பேர் ஆகும். இதில் 4,371 பேர் ஆண்கள் மற்றும் 4,810 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
பொன்னுருவி அம்மன் கோயில் என்ற அம்மன் கோயில் ஒன்று பரமன்குறிச்சி பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
அரசியல்
பரமன்குறிச்சி பகுதியானது, திருச்செந்தூர் (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, தூத்துக்குடி மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads