பல்லாவரம் தொடருந்து நிலையம்

From Wikipedia, the free encyclopedia

பல்லாவரம் தொடருந்து நிலையம்map
Remove ads

பல்லாவரம் தொடருந்து நிலையம் (Pallavaram railway station, நிலையக் குறியீடு:PV) இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்திலுள்ள, சென்னை நகரில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இந்த நிலையம் சென்னையின் புறநகர் இருப்பு பாதை, தெற்கு வழித்தடத்தில் அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பல்லாவரம், பொது தகவல்கள் ...

இது பல்லாவரம் மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளான பம்மல், நாகல்கேனி, அனகாபுத்தூர், பொழிச்சலூர், கோவல் பஜார், திருநீர்மலை, குன்றத்தூர் மற்றும் கீழ்க்கட்டளை ஆகிய பகுதி மக்களின் போக்குவரத்துக்கு சேவை செய்கிறது. இது சென்னைக் கடற்கரையிலிருந்து சுமார் 23 கி.மீ (14 மைல்) தொலைவில் அமைந்துள்ளது. மேலும் கடல் மட்டத்திலிருந்து 4மீ (13 அடி) உயரத்தில் உள்ளது.

Remove ads

வரலாறு

Thumb
பல்லாவரம் தொடருந்து நிலையம்

இந்த நிலையம் சென்னை நகரின் முதல் புறநகர் வழித்தடமான சென்னைக் கடற்கரை - தாம்பரம் வழித்தடத்தில் அமைந்துள்ளது. 1928இல் தொடங்கி மார்ச் 1931இல் இருப்புப்பாதை பணிகள் நிறைவடைந்தவுடன், புறநகர் தொடருந்து சேவைகள் 11 மே 1931 அன்று சென்னைக் கடற்கரைக்கும் - தாம்பரத்திற்கும் இடையில் தொடங்கப்பட்டன. இது நவம்பர் 15, 1931இல் மின்மயமாக்கப்பட்டது.[1]

சென்னையில் உள்ள முக்கிய தொடருந்து நிலையங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads