மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)
தொல்லியல் களம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் Pre-Pottery Neolithic A (PPNA), மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் முதல் நிலைக்காலத்தை குறிப்பதாகும். இக்கற்காலம் பண்டைய அண்மை கிழக்கின் அனதோலியா மற்றும் லெவண்ட் பகுதிகளில் கிமு 10,000 முதல் கிமு 8,800 முடிய விளங்கியது.[1][2] வளமான பிறை தேசத்தில் அனதோலியா, லெவண்ட் மற்றும் மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளில் மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலத்தின் (அ) கால கட்டத்தில் தொல்லியல் மேடுகள் அகழ்வாய்வுவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மெல்லிய உருண்டை வடிவலான களிமண் செங்கற்களால் கட்டப்பட்ட குடியிருப்புகள், பயிர்த் தொழில், காட்டு விலங்குகளை வேட்டையாடுதல், இறந்தவர்களை சடலங்களை குடியிருப்புகளின் தரையின் அடியில் பள்ளம் தோண்டி புதைத்தல் இக்காலத்தின் சிறப்பம்சமாகும்.[3][4]
இப்புதிய கற்காலத்திற்கு எதுக்காட்டாக எரிக்கோ மற்றும் பெருவயிறு மலை தொல்லியல் களங்கள் விளங்குகிறது. இக்கற்காலத்தில் சுட்ட களிமண் மட்பாண்டத்தின் பயன்பாடு மக்கள் அறிந்திருக்கவில்லை. இக் கற்காலத்திற்கு பின்னர் இடைக் கற்காலத்தில் லெவண்ட் பகுதிகளில் நாத்தூபியன் பண்பாடு நிலவியது.
Remove ads
குடியிருப்புகள்

இக்காலத்திய கிமு 9,000 முந்தைய உலகின் முதல் மக்கள் குடியிருப்பு நகரம் எரிக்கோ தொல்லியல் களத்தின் அகழ்வாய்வுவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[6]
எரிக்கோ நகரததின் மக்கள்தொகை 2,000 – 3,000 கொண்டிருந்தது. மக்கள் பாதுகாப்பிற்கு நகரத்தைச் சுற்றி கனமான சுவர்களும், காவல் கோபுரங்களும் கொண்டிருந்தன.[7][8][9]
- விலங்கின் சிற்பம், கிமு 9,000, பெருவயிறு மலை துருக்கி
- எரிக்கோ கோபுரம், எரிக்கோ, கிமு 8,000, மட்பாண்டத்திற்கு முந்தைய புதிய கற்காலம் (அ)வின் இறுதியில் கட்டப்பட்டது.
Remove ads
அடக்க முறைகள்

இக்கற்காலத்தில் இறந்தவர்களை அடக்கும் செய்யும் முறை வித்தியாசமானது. குடியிருப்பின் தரையில் பள்ளம் தோண்டி இறந்தவர்களை புதைக்கும் முறை விசித்திரமான வழக்கம் நிலவியது. கென்யான் தொல்ல்லியல் களத்தில் மக்கள் குடியிருப்பு பகுதிகளின் தரைதளம், அஸ்திரவாரம் மற்றும் சுவர்களுக்கு இடையே 279 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.[4]
கற்கருவிகள்
இக்காலத்தில் கற்களால் ஆன கூர்மையான ஈட்டி, கத்தி, கோடாரி, அரிவாள், வளைந்த கூர்மையான வாசி போன்ற கற்கருவிகள் மக்கள் வேட்டையாடுவதற்கும், பயிர்தொழில் செய்வதற்கும், வீட்டுப் பயன்பாட்டிற்கும் பயன்படுத்தினர்.
பயிர்த்தொழில் மற்றும் தாணியக் களஞ்சியங்கள்

மக்கள் கூட்டமாக வாழ்ந்த இக்காலத்தில் உள்ளூர் சிறுதாணியங்களான பார்லி, ஓட்ஸ் பயிரிட்டனர். தாணியங்களை தாணியக் களஞ்சியங்களில் சேமித்து வைத்தனர்.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads