வானமாதேவி, காட்டுமன்னார்கோயில்

From Wikipedia, the free encyclopedia

வானமாதேவி, காட்டுமன்னார்கோயில்map
Remove ads

வானமாதேவி (அங்கிலம்: Vanamadevi), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோயில் வட்டத்தில் இருக்கும் ஓர் ஊராட்சி ஆகும். இதன் பெயரில் மற்றொரு ஊராட்சி கடலூர் அருகில் உள்ளது.

விரைவான உண்மைகள்
Remove ads

புவியியல்

இவ்வூரின் அமைவிடம் 11.34222°N 79.5121°E / 11.34222; 79.5121 ஆகும். விக்கிரவாண்டி - கும்பகோணம் - தஞ்சாவூர் தேசிய நெடுஞ்சாலையில் (NH-45C) சேத்தியாத்தோப்புலிருந்து 10 கி.மீ தொலைவில் வானமாதேவி ஊராட்சி உள்ளது.

மக்கள் வகைப்பாடு

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1769 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள். இவர்களில் 50.8% ஆண்கள், 49.2% பெண்கள் ஆவார்கள். வானமாதேவி மக்களின் சராசரி கல்வியறிவு 48.2% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 59.7%, பெண்களின் கல்வியறிவு 40.2% ஆகும். வானமாதேவி மக்கள் தொகையில் 14% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

போக்குவரத்து

சென்னையிலிருந்து கும்பகோணம் செல்லும் அணைத்து பேருந்துகளும் வானமாதேவி ஊராட்சி வழியாக செல்கிறது. மேலும் கடலூரிலிருந்து வடலூர் வழியாக கும்பகோணம் செல்லும் அணைத்து பேருந்துகளும் இவ்வூராட்சி வழியாக செல்கிறது.

குறிப்புகளும் மேற்கோள்களும்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads