ஜக்டியால் மாவட்டம்
தெலுங்கானாவில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜக்டியால் மாவட்டம் (Jagtial district), இந்தியாவின் தெலுங்கானா மாநிலத்தின் 31 மாவட்டங்களில் ஒன்றாகும். கரீம்நகர் மாவட்டத்தின் ஜக்டியால் மற்றும் மெட்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்களைக் கொண்டு இம்மாவட்டம் அக்டோபர், 2016-இல் நிறுவப்பட்டது. [1][2]இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஜக்டியால் நகரம் ஆகும். இதன் பிற நகரங்கள் கொரட்லா, மெட்பள்ளி மற்றும் தர்மாபுரி ஆகும்.


Remove ads
புவியியல்
3,043.23 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட[3] ஜக்டியால் மாவட்டத்தின் வடக்கில் நிர்மல் மாவட்டம், வடகிழக்கில் மஞ்செரியல் மாவட்டம், தெற்கில் கரீம்நகர் மாவட்டம், தென்கிழக்கில் பெத்தபள்ளி மாவட்டம், மேற்கில் நிசாமாபாத் மாவட்டமும் எல்லைகளாக அமைந்துள்ளது.
மக்கள் தொகை
2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, ஜக்டியால் மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகை 9,83,414 ஆகும்.[3]
மாவட்ட நிர்வாகம்
ஜக்டியால் மாவட்டம் ஜக்டியால் மற்றும் மெட்பள்ளி என இரண்டு வருவாய் கோட்டங்கள் கொண்டுள்ளது. இவ்விரு வருவாய் கோட்டங்களும் 18 மண்டல்களைக் கொண்டுள்ளது. [3]
மண்டல்கள்
ஜக்டியால் மற்றும் மெட்டப்பள்ளி வருவாய் கோட்டங்களில் உள்ள மண்டல்களின் விவரம்:[4]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads