ஆத்தூர், செங்கல்பட்டு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஆத்தூர் என்பது இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின் செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதியாகும்.[1][2][3]
Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 55.02 மீ. உயரத்தில், (12.7344°N 79.9473°E) என்ற புவியியல் ஆள்கூறுகள் கொண்டு ஆத்தூர் அமையப் பெற்றுள்ளது.
மக்கள்தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அடிப்படையில், ஆத்தூர் ஊரின் மொத்த மக்கள்தொகை 11,981 பேர் ஆகும். இதில் 5,972 பேர் ஆண்கள் மற்றும் 6,009 பேர் பெண்கள் ஆவர்.[4]
சமயம்
இந்துக் கோயில்
கல்யாண வரதராஜ பெருமாள் கோயில் என்ற பெருமாள் கோயில் ஒன்று ஆத்தூர் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயிலானது, தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டின் பராமரிப்பில் இயங்குகிறது.[5]
அரசியல்
ஆத்தூர் பகுதியானது, செங்கல்பட்டு (சட்டமன்றத் தொகுதி) வரம்புக்கு உட்பட்டதாகும். மேலும் இப்பகுதி, காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி சார்ந்தது.[6]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads